பொருளாதார உரிமை.. அக விலைப்படி நிலுவை; அரசு ஊழியர்களுக்கு உடனே வழங்கக் கோரிக்கை!

பொருளாதார உரிமை.. அக விலைப்படி நிலுவை; அரசு ஊழியர்களுக்கு உடனே வழங்கக் கோரிக்கை!
News Image
<p>அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</p> <p><strong>இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:</strong></p> <p>&rsquo;&rsquo;மத்திய அரசு,&nbsp;விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி (DA)&nbsp;உயர்வை அறிவித்து,&nbsp;அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமத காலத்திற்கான நிலுவைத் தொகையையும் உடனுக்குடன் வழங்கி வருகிறது. அதேபோல்,&nbsp;தமிழ்நாடு அரசும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அமல்படுத்தி,&nbsp;அதற்குரிய நிலுவைத் தொகைகளையும் வழங்கி வருகிறது.</p> <p>ஆனால்,&nbsp;அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மட்டும் இந்த நடைமுறையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான அகவிலைப்படி உயர்வுகள் பெரும்பாலும் தாமதமாக அமல்படுத்தப்படுவதுடன்,&nbsp;அதனால் உருவாகும் நிலுவைத் தொகைகளும் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.</p> <h2><strong>மே 1 முதல் மட்டுமே அமல்</strong></h2> <p>தற்போது அகவிலைப்படி&nbsp;58&nbsp;சதவீதத்தில் இருந்து&nbsp;60&nbsp;சதவீதமாக உயர்த்தப்பட்டு, 2026&nbsp;ஜனவரி&nbsp;1&nbsp;முதல் அமல்படுத்தப்பட வேண்டிய நிலையில்,&nbsp;அது தாமதமாக&nbsp;2026&nbsp;மே&nbsp;1&nbsp;முதல் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.</p> <p>இதன் காரணமாக&nbsp;2026&nbsp;ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.</p> <p>இதுபோன்ற நிலை கடந்த காலங்களிலும் ஏற்பட்டுள்ளதுடன்,&nbsp;பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி பாக்கித் தொகைகளும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளன.</p> <h2><strong> பொருளாதார உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதா?</strong></h2> <p>அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாடுகளை தாங்கி நிற்கும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். அவர்களின் நியாயமான பொருளாதார உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.</p> <p>&nbsp;எனவே,&nbsp;புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசும்,&nbsp;போக்குவரத்துத் துறை அமைச்சரும் இப்பிரச்சினையை மனிதநேய அடிப்படையிலும் தொழிலாளர் நலன் அடிப்படையிலும் மறுபரிசீலனை செய்து,&nbsp;இதுவரை வழங்கப்படாமல் உள்ள அனைத்து அகவிலைப்படி நிலுவைத் தொகைகளையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <h2><strong>உடனே வழங்குக</strong></h2> <p>&nbsp;மேலும்,&nbsp;இனிவரும் காலங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் ஒவ்வொரு அரையாண்டிலும்,&nbsp;அதற்குரிய நிலுவைத் தொகைகளையும் சேர்த்து உடனடியாக வழங்கும் நடைமுறையை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p> <p>தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படும் போது மட்டுமே அவர்களிடம் பணியாற்றும் உற்சாகமும்,&nbsp;அர்ப்பணிப்பு உணர்வும் மேலும் அதிகரிக்கும்.</p> <p>எனவே, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து, நிலுவையில் உள்ள அகவிலைப்படி பாக்கித் தொகைகளை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்&rsquo;&rsquo; என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/ev-cng-petrol-which-type-of-car-is-best-in-terms-of-safety-262841" width="631" height="381" scrolling="no"></iframe></p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks