
<p>மதுரை மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.1200 முதல் ரூ.1300 வரை விற்பனை ஆகிறது. அதே பிற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.</p>
<p><strong>மதுரை மல்லிகைப் பூ விற்பனை</strong> </p>
<p>மதுரை மல்லி என்பது மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படும் சிறப்பு வாய்ந்த பூவாகும். மதுரை மையமாக உள்ளதால் மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களுக்கு வணிகம் செய்ய ஏதுவாக உள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூ கி.மு 300-ஆம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருகின்றன. இதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மற்றும் கோயில் சிற்பங்களில் காணப்படுகின்றன. இப்பூக்கள் தங்களது தனித்துவமான மணம் மற்றும் நறுமணத்திற்காக பிரசித்தி பெற்றவை. இதனால் வெளியூர் பயணிகள் மதுரை வரும் போது மல்லிகைப் பூவை விரும்பி வாங்குகின்றனர். இதே போல் கோயில் நகரமான மதுரையில் பிற பூக்களின் விற்பனையும் எப்போது சூடுபறக்கும். இந்நிலையில் இன்று நான்கு மாதங்கள் கழித்து மல்லிகைப் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.</p>
<div dir="auto"><strong>மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மதுரை மல்லி கிலோ ரூ.1200 முதல் ரூ.1300 வரை,</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">பிச்சி ரூ.500, </div>
<div dir="auto"> </div>
<div dir="auto">முல்லை ரூ.400 முதல் ரூ.500, </div>
<div dir="auto"> </div>
<div dir="auto">செவ்வந்தி ரூ.300 முதல் ரூ.350, </div>
<div dir="auto"> </div>
<div dir="auto">சம்பங்கி ரூ.100, </div>
<div dir="auto"> </div>
<div dir="auto">செண்டு மல்லி ரூ.50,</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"> கனகாம்பரம் ரூ.800 முதல் ரூ.1000வரை,</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"> ரோஸ் ரூ.250, </div>
<div dir="auto"> </div>
<div dir="auto">பட்டன் ரோஸ் ரூ.150,</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"> பன்னீர் ரோஸ் ரூ.300,</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"> கோழிக்கொண்டை ரூ.150, </div>
<div dir="auto"> </div>
<div dir="auto">அரளி ரூ.250, </div>
<div dir="auto"> </div>
<div dir="auto"> மரிக்கொழுந்து ரூ.150,</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"> தாமரை (ஒன்றுக்கு) ரூ.10 முதல் 20 வரை என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ல் பூக்களின் விலை எப்படி உள்ளது என்பதை காணலாம்.</div>
<p>அடுத்தடுத்து பெய்து வரும் மழை காரணமாக மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளது. நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மதுரை மலர் சந்தைக்கு வரத்தும் குறைவாக உள்ளது. வரும் நாட்களில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உண்டு இதனால் விலையும் குறையலாம். மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன்</p>
Source: Read Full Article