‘ஈரான் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்’.. 10 எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி! போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் வெளியிட்ட சஸ்பென்ஸ் தகவல்!

‘ஈரான் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்’.. 10 எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி! போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் வெளியிட்ட சஸ்பென்ஸ் தகவல்!

“சரியான நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்” - ஹார்முஸ் ஜலசந்தியில் திடீர் தளர்வு: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

வாஷிங்டன்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஒரு அதிரடி ‘சஸ்பென்ஸ்’ தகவலை வெளியிட்டுள்ளார். ஈரானுடனான போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக உலக நாடுகள் தத்தளித்து வரும் வேளையில், ஈரான் அரசு தங்களுக்கு ஒரு ‘விலைமதிப்பற்ற பரிசை’ வழங்கியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்தப் பரிசு வேறொன்றுமில்லை, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட சமிக்ஞையாக, 10 ராட்சத எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளதுதான் அந்த ‘மெகா’ கிப்ட்.

கடந்த சில நாட்களாகவே ஈரானிடமிருந்து ஒரு பெரிய ‘பரிசு’ வரப்போவதாக டிரம்ப் சூசகமாகத் தெரிவித்து வந்தார். இது குறித்து இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரான் நேற்று ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தது. அவர்கள் எங்களுக்கு வழங்கிய அந்தப் பரிசு மிகப்பெரிய பண மதிப்புடையது. தொடக்கத்தில் எட்டு பெரிய எண்ணெய் கப்பல்களும், பின்னர் இரண்டு கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இது அவர்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதையே காட்டுகிறது. நாங்கள் சரியான நபர்களுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது” எனத் தனது பாணியில் ‘ஹைப்’ ஏற்றியுள்ளார்.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் ஹார்முஸ் ஜலசந்தி கடந்த சில வாரங்களாக முடக்கப்பட்டிருந்தது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் 95 சதவீதம் வரை சரிந்து, பெட்ரோல் - டீசல் விலை ‘ராக்கெட்’ வேகத்தில் உயரும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில், 10 கப்பல்கள் கடக்க அனுமதிக்கப்பட்டிருப்பது சர்வதேச சந்தையில் ஒரு சிறிய ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. “இந்த ஒரு நடவடிக்கையாலேயே எல்லாம் சரியாகிவிடாது என்றாலும், இது ஒரு நல்ல தொடக்கம். விரைவில் பெட்ரோல் நிலையங்களில் விலை குறைவதைப் பார்ப்பீர்கள்” என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.


இந்தத் திடீர் திருப்பத்தின் பின்னணியில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கத் தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த ரகசியப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ஈரானின் புதிய தலைமை, போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளைச் சரிசெய்யவும், தங்களின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தவும் இந்த ‘ஆஃபரை’ வழங்கியிருக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


இருப்பினும், மற்றொரு புறம் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவது ஒரு ‘சஸ்பென்ஸ்’ ஆக நீடிக்கிறது. “நாங்கள் குண்டுகள் மூலமே பேச்சுவார்த்தை நடத்துவோம்” என அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் கூறியுள்ள நிலையில், டிரம்பின் இந்த ‘பரிசு’ அரசியல் போரின் போக்கை மாற்றுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்பட்டால் மட்டுமே உலகப் பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்பும். அதுவரை இந்த ‘கிப்ட்’ பாலிடிக்ஸ் உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks