வாகன ஓட்டிகளுக்கு பல்ப்.. ஏப்.1 முதல் எகிறுகிறது சுங்கக் கட்டணம்! சுங்கச்சாவடிகளில் 5% வரை ஹைக்!

வாகன ஓட்டிகளுக்கு பல்ப்.. ஏப்.1 முதல் எகிறுகிறது சுங்கக் கட்டணம்! சுங்கச்சாவடிகளில் 5% வரை ஹைக்!

விலைவாசி உயர்வால் மக்கள் கடும் ‘டென்ஷன்’ - சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிரடி அமல்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வாய்ப்பு!

சென்னை: ஏற்கனவே ஈரான் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் தமிழக மக்களுக்கு, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மேலும் ஒரு ‘ஷாக்’ காத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள 60 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் 3 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த ‘அதிரடி’ நடவடிக்கையால், சரக்கு வாகனங்களின் வாடகை உயர்ந்து, அதன் எதிரொலியாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள சுமார் 6,600 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சென்னை - கன்னியாகுமரி, திருச்சி - சேலம் மற்றும் சேலம் - கோவை போன்ற முக்கிய வழித்தடங்களில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1 முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகள், மதுரை வெளிவட்டச் சாலையின் 2 மையங்கள் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையின் அக்கரை, நாவலூர் உள்ளிட்ட ‘பிஸி’யான இடங்களிலும் இந்த ‘கட்டண வேட்டை’ தொடங்குகிறது. மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்போது நிலவும் சர்வதேச சூழல் மற்றும் உள்ளூர் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் ஏற்கனவே ‘டைட்’ ஆன நிலையில் உள்ளனர். ஈரான் போர் காரணமாக வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பிரீமியம் மற்றும் பவர் பெட்ரோல் விலையும் எகிறியுள்ளது. ஹோட்டல் உணவுகளின் விலை உயர்ந்துள்ள சூழலில், இப்போது சுங்கக் கட்டணமும் உயர்வது எரியும் நெருப்பில் ‘பெட்ரோல்’ ஊற்றுவது போல் உள்ளது. “தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் இந்தச் சாலைகளைப் பயன்படுத்துகின்றன. இந்த ‘ஹைக்’ காரணமாக ஒரு கிலோ காய்கறிக்கு 2 முதல் 5 ரூபாய் வரை விலை கூட வாய்ப்புள்ளது” என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


இதற்கிடையில், சுங்க வசூல் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு ‘ராக்கெட்’ வேகத்தில் உயர்ந்து வருகிறது. 2022-23 நிதியாண்டில் ரூ.3,758 கோடியாக இருந்த வருவாய், 2024-25-ல் ரூ.4,300 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டிலும் பிப்ரவரி வரை ரூ.4,000 கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. வருவாயை அதிகரிக்கப் புதிய வருடாந்திர அனுமதிச் சீட்டு முறையை அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். ரூ.3,000 செலுத்தி 200 முறை பயணம் செய்யும் இந்த வசதி மூலம் வசூலை இன்னும் ‘சீராக’ வைக்கத் திட்டமிட்டுள்ளனர்.


ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் சாமானிய மக்களின் பட்ஜெட் ‘டோட்டலாக’ கொலப்ஸ் ஆக வாய்ப்புள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த ‘சுங்கக் கட்டண உயர்வு’ விவகாரம் ஒரு மிகப்பெரிய அரசியல் ‘அட்டாக்’ ஆக மாறவும் வாய்ப்புள்ளது. அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு கட்டண உயர்வைத் தற்காலிகமாகவாவது நிறுத்தி வைக்குமா அல்லது மக்கள் கூடுதல் சுமையைச் சுமக்க வேண்டியிருக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks