தமிழகத்தில் இன்று, நாளை மழை தொடரும்! - நெல்லை, தென்காசிக்குக் கனமழை எச்சரிக்கை! Rain to Continue in Tamil Nadu Today and Tomorrow

தமிழகத்தில் இன்று, நாளை மழை தொடரும்! - நெல்லை, தென்காசிக்குக் கனமழை எச்சரிக்கை! Rain to Continue in Tamil Nadu Today and Tomorrow

மண்டலக் கீழடுக்குச் சுழற்சியால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வறண்ட வானிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கிழக்கு திசைக் காற்றின் வேக மாற்றம் காரணமாகச் சென்னை உட்படப் பல மாவட்டங்களில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழைப்பொழிவு டிசம்பர் 17-ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு திசைக் காற்றின் வேக மாற்றம் காரணமாக, டிசம்பர் 16, 2025 தேதியான இன்று, தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  அதே சமயத்தில், டிசம்பர் 17, 2025 தேதியான நாளையும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை பதிவாகி வருகிறது. தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கருத்துப்படி, கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி முதல் டெல்டா மாவட்டங்கள் வரை, அதேபோல் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் இன்றும் நாளையும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பதிவாகக்கூடும்.

உள் தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில், குறிப்பாக மாஞ்சோலை பகுதிகளில் மழை பதிவாகக்கூடும். இருப்பினும், இந்த மழை மிதமானதாகவே இருக்கும், கனமழையாக இருக்காது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மழையின் தாக்கத்தால் இரவு நேர வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்பட்டாலும், இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் குளிர்ந்த வானிலை நிலவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 20C முதல் 21C வரை பதிவாகியுள்ளது.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால், அதை காணச் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிகளில் குவிந்து வருகின்றனர். வரக்கூடிய டிசம்பர் 18 முதல் 22-ஆம் தேதி வரை தமிழகத்தில் மீண்டும் வறண்ட வானிலை நிலவும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், டிசம்பர் 18 முதல் 20-ஆம் தேதி வரை வெப்பநிலையின் தாக்கம் இயல்பை விட 2C முதல் 3C வரை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks