ராகுல் காந்தி மனநிலை சரியில்லாதவர் - உ.பி. துணை முதல்வர் காட்டம்! UP Deputy CM Keshav Maurya Calls Rahul Gandhi Mentally Unstable

ராகுல் காந்தி மனநிலை சரியில்லாதவர் - உ.பி. துணை முதல்வர் காட்டம்! UP Deputy CM Keshav Maurya Calls Rahul Gandhi Mentally Unstable

பிஹார் தேர்தல் களத்தில் வார்த்தைப் போர்.. மோடி-நிதிஷ் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை – எதிர்க்கட்சிகளைத் தாக்கிய துணை முதல்வர்! 

உத்தரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான கேசவ் பிரசாத் மௌரியா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் பிஹார் 'மகாபந்தன்' கூட்டணிக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பிஹார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நெருங்கும் வேளையில், எதிர்க்கட்சிகளின் "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், ராகுல் காந்தியை "மனநிலை சரியில்லாதவர்" என்று தாக்கி பேசியுள்ளார்.

ராகுல் காந்தி சமீபத்தில் முன்வைத்த "வாக்குத் திருட்டு" (Vote Stealing) குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த கேசவ் மௌரியா, ராகுல் காந்தியின் மனநிலை குறித்து கடுமையான விமர்சனத்தைச் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ராகுல் காந்தி மனநிலை சரியில்லாதவர் போல இருக்கிறார். தேஜஸ்வி யாதவ் கூடத் தன்னைத் தானே கையாளச் சிரமப்படுகிறார் என்று விமர்சித்தார்.  எதிர்க்கட்சிகள் எப்போதும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைப்பார்கள் என்றும், "வாக்குத் திருட்டு" என்பது பிஹாருக்கோ அல்லது நாட்டுக்கோ கவலையளிக்க வேண்டிய விஷயம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்த மௌரியா, வாக்குத் திருட்டு என்பது இங்குப் பிரச்சினையே அல்ல. இது அதிகாரத்தின் மீதான பேராசை ஆகும். அவர்கள் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டதால், பிரதமர் நரேந்திர மோடி எப்படிப் பிரதமரானார், நிதிஷ் குமார் எப்படி இவ்வளவு காலமாக முதலமைச்சராக இருக்கிறார் என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதுதான் உண்மையான பிரச்சினை என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.  எதிர்க்கட்சிகளின் நோக்கம் ஊடுருவல்காரர்களை வாக்காளர்களாக மாற்றி, அவர்களைப் பாதுகாப்பதே என்றும், ஆனால் அவர்களின் இந்த முயற்சி வெற்றிபெறாது என்றும் அவர் தெரிவித்தார்.

நடைபெற்று வரும் பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கேசவ் பிரசாத் மௌரியா முழு நம்பிக்கை தெரிவித்தார். பிஹார் மக்கள் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணியை நம்புகிறார்கள் என்று கூறிய அவர், NDA கூட்டணியை வெற்றியை நோக்கிச் செல்லும் "பஞ்ச பாண்டவர்கள் என்றும் ஒப்பிட்டு பேசினார்.

முதல் கட்ட வாக்குப்பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது என்றும், இரண்டாம் கட்டம் அதைவிட சிறப்பாக இருக்கும் என்றும் மௌரியா தெரிவித்தார்.  பிஹார் தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே வார்த்தைப் போர் மேலும் அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks