கடலூரில் பரபரப்பு: ரவுடியை கைது செய்த போலீசாருடன் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம்! Rowdy Kannabiran Pandiyan Arrested: Supporters Clash with Police in Cuddalore

ரவுடி கண்ணபிரான் பாண்டியன் கைது: போலீசாருடன் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம், கடலூரில் பரபரப்பு!

கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கண்ணபிரான் பாண்டியனைக் கைது செய்ய முயன்றபோது, அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கண்ணபிரான் பாண்டியன். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கண்ணபிரான் பாண்டியன், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார்.  தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கு ஒன்று தொடர்பாகக் கண்ணபிரான் பாண்டியனைக் மீண்டும் கைது செய்ய திருநெல்வேலி போலீசார் கடலூருக்கு வந்தனர்.

அவர் சிறையில் இருந்து வெளியே வந்தபோது, சிறை வாசலில் அவரைக் கொண்டாட்டத்துடன் வரவேற்கக் காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் கூட்டமாக இருந்தனர். போலீசார் கண்ணபிரான் பாண்டியனைக் கைது செய்ய முற்பட்டபோது, இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆதரவாளர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

போலீசார் வாக்குவாதத்தைப் பொருட்படுத்தாமல் கண்ணபிரான் பாண்டியனைக் கைது செய்து, திருநெல்வேலி நோக்கி போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

ஆனால், விடாப்பிடியாக அவரது ஆதரவாளர்கள் தங்கள் வாகனங்களில் போலீஸ் வாகனத்தைப் பின் தொடர்ந்துள்ளனர். இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக, போலீசார் கண்ணபிரான் பாண்டியனை வழியில் உள்ள விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் தற்காலிகமாக அடைத்து வைத்தனர். பின்னர், நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு அவர் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலி சிறைக்கு மாற்றப்பட்டார். இந்தச் சம்பவம், கடலூர் மற்றும் விருத்தாச்சலம் பகுதிகளில் சிறிது நேரம் பதட்டத்தை ஏற்படுத்தியது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk