நவம்பர் மாதத்திற்கான நீர்: தமிழகத்துக்கு 13.78 டி.எம்.சி. நீர் வழங்க காவிரி ஆணையம் உத்தரவு! Cauvery Water Management Authority Orders Karnataka to Release 13.78 TMC to Tamil Nadu for November

நவம்பர் மாதத்திற்கான நீர்: தமிழகத்துக்கு 13.78 டி.எம்.சி. நீர் வழங்க காவிரி ஆணையம் உத்தரவு! Cauvery Water Management Authority Orders Karnataka to Release 13.78 TMC to Tamil Nadu for November

கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 45வது கூட்டம், ஆணையத் தலைவர் எஸ். கே. ஹல்தர் தலைமையில் இன்று (நவம்பர் 6, 2025) காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நவம்பர் மாதத்திற்கான காவிரி நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர். கர்நாடகம், கேரளம், புதுச்சேரி நீர்வளத்துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

நீர் இருப்பு நிலவரம் (நவம்பர் 5 நிலவரப்படி):

மேட்டூர் அணையின் நீர் இருப்பு: 89.741 டி.எம்.சி. (TMC)

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து: 6.401 டி.எம்.சி.

அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர்: வினாடிக்கு 18,427 கனஅடி

கூடுதல் நீர் வரத்து: ஜூன் 1 முதல் அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில், கர்நாடகம் வழங்க வேண்டிய 144.7 டி.எம்.சி-க்கு பதிலாக, அணைகளில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாகத் தமிழகத்திற்குக் கூடுதலாக 294 டி.எம்.சி. நீர் கிடைத்துள்ளதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் மாதத்திற்கான உத்தரவு: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நவம்பர் மாதத்திற்கான 13.78 டி.எம்.சி. நீரை கர்நாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks