Weather Warning: அதிரடி வானிலை எச்சரிக்கை! - அடுத்த சில மணி நேரங்களுக்கு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! Heavy Rain and Thunderstorms Expected in North Tamil Nadu

மாலை 6 மணி வரை நீடிக்கும்; தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உட்பட வட மாவட்டங்கள் உஷார்; சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு!


சென்னை: வட தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மழை, இன்று மாலை 6 மணி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பின்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும். திடீர் மழை காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கவும், சில பகுதிகளில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் பயணிக்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த மழையின் போது இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் திறந்தவெளிகள், மரங்களுக்குக் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அத்தியாவசியத் தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியே செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!