"ஸ்டாலின் திட்டத்தில் வெடித்த பெரும் சர்ச்சை.. கிராம அதிகாரிகளை மிரட்டுவதாக நபர் மீது புகார்: கோட்டாட்சியரிடம் மனு! Villagers File Complaint Against Person Threatening Govt Officials in Ranipet
வைரல் வீடியோக்களால் பரபரப்பான ஆற்காடு சாத்தூர் கிராமம்; கிராமத்திற்கு அவப்பெயர் எனப் பொதுமக்கள் கொதித்தெழுந்தனர்!
அவர் தொடர்ந்து கிராமத்திற்கு வரும் அரசு அதிகாரிகளை மிரட்டுவது, அரசுத் திட்டங்களைச் சீர்குலைப்பது, மற்றும் கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்கள் ராணிப்பேட்டை கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
வெங்கடாபதி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஏராளமான கிராம மக்கள் திரண்டு வந்து கோட்டாட்சியரிடம் ஒரு "முக்கிய" மனுவினை வழங்கியுள்ளனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
