மாற்றுத்திறனாளி தாக்கப்பட்டதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்: குற்றவாளிகள் கைது செய்ய கோரிக்கை! Protest in Ranipet Condemns Assault on a Differently-Abled Person

மாற்றுத்திறனாளி தாக்கப்பட்டதற்கு எதிராக ராணிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்: குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என முழக்கம்!



அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டனம்; காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

ராணிப்பேட்டை: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி கந்தசாமி தாக்கப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகள்மீது தமிழக அரசு காவல்துறை "உடனடியாக நடவடிக்கை" எடுக்கக் கோரியும், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் ஒரு "மாபெரும்" கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாவட்டத் துணை அமைப்பாளர் கே. பிச்சாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மணிகண்டன், தாலுகா செயலாளர் ஜி. மதியழகன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு, கண்டன உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர். மாற்றுத்திறனாளிகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசின் கடமையை வலியுறுத்தி, "கண்டன முழக்கங்கள்" விண் அதிர எழுப்பப்பட்டன.
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!