நெல்லையில் பரபரப்பு: பைக்கர் மீது காரை மோதிய எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்! TN police officer suspended for ramming car into a biker in Tirunelveli

கார் போனட்டில் தொங்கியபடி அம்மா என அலறிய காட்சி; வைரல் வீடியோவால் அதிரடி நடவடிக்கை!

திருநெல்வேலியில், போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) ஒருவர், தனது காரால் பைக் ஓட்டுநரை மோதி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் விவரங்கள்:

திருநெல்வேலி, கணேஷ் திரையரங்கம் அருகே, திடீரென நின்ற பேருந்தின் பின்னால் பைக் ஒன்று மோதியது. அப்போது, அந்த பைக்கின் பின்னால் வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் காந்திராஜனின் கார், பைக் மீது மோதி தூக்கி எறிந்தது. இதனால் ஆத்திரமடைந்த பைக் ஓட்டுநர், தனது பைக்கின் மீது மோதியது குறித்து நியாயம் கேட்டு, காந்திராஜனின் காரை வழிமறித்துத் தகராறு செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், பைக் ஓட்டுநர் காரை வழிவிடாமல் நின்றதால், காந்திராஜன் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, அந்த நபர் காரின் போனட்டில் ஏறி தொங்கியவாறு, ஐயோ அம்மா... காப்பாற்றுங்கள் என அலறியபடி நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அருகிலிருந்தவர்கள் வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தனர். முதலில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட எஸ்.எஸ்.ஐ. காந்திராஜன், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!