ஏற்காட்டில் மலைவாழ் மக்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி! Skill Development Training for Tribal People in Yercaud

இயற்கை வேளாண்மை, பூச்சி கட்டுப்பாடு குறித்து பயிற்சி!

ஏற்காட்டில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில், மலைவாழ் மக்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கான இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், அரசின் திட்டங்கள், மற்றும் பயிர் சாகுபடியில் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு ஆகியன குறித்து மலைவாழ் மக்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாப்பதன் மூலம் தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக, ஏற்காட்டில் பரவலாகப் பயிரிடப்படும் மிளகு மற்றும் காபி பயிர்களில் ஏற்படும் பூச்சித் தாக்குதல்களை எப்படி மேலாண்மை செய்வது என்பது குறித்தும் விரிவாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிவில், விவசாயப் பணிகளுக்குத் தேவையான இடுபொருட்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!