சேலத்தில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு! 3 Sovereigns of Gold Stolen from Elderly Woman in Salem

ஜன்னல் வழியாகக் கைவிட்டு திருட்டு; போலீசார் தேடல் தீவிரம்!


சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம், மர்ம நபர்கள் ஜன்னல் வழியாகக் கையை விட்டு 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

கருப்பூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி நீலா என்பவர், நேற்று இரவு தனது வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் யாரோ ஜன்னல் வழியாகக் கையை விட்டு, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த மூதாட்டி, கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!