சிறந்த ஆசிரியர்களுக்கு விருது: அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கும் மரியாதை! Good Teacher Award for CBSE and International School Teachers Too: Anbil Mahesh Announces

அடுத்த ஆண்டு முதல் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சிறந்த ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ மற்றும் சர்வதேசப் பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றிய 1000 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அப்போது அவர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இரண்டாவது பெற்றோர் என்றும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்தவுடன் ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சிறந்த ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல், அடுத்த ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி முதல், சிபிஎஸ்இ மற்றும் சர்வதேச இளங்கலை கல்விப் பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில், புதுமையான கற்பித்தல், கல்வித் தலைமைத்துவம், சிறப்பு கல்வி மற்றும் வாழ்நாள் சாதனை ஆகியவற்றில் சிறந்து விளங்கிய ஐந்து ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.

சிறந்த ஆசிரியர்களுக்கு விருது:

இந்த நிகழ்ச்சியில், புதுமையான கற்பித்தல், கல்வித் தலைமைத்துவம், சிறப்பு கல்வி மற்றும் வாழ்நாள் சாதனை ஆகியவற்றில் சிறந்து விளங்கிய ஐந்து ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

நீங்கள் நம்பும் பாதுகாப்ப - இப்போதே வாங்குங்கள்!