₹10,000 லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் சஸ்பெண்ட்! Female surveyor suspended for taking ₹10,000 bribe in Salem

சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட நில அளவை உதவி இயக்குநர்; துறை ரீதியான விசாரணைக்கும் பரிந்துரை!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ₹10,000 லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்ட பெண் நில அளவையர் ஜீவிதா பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஜீவிதா மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆத்தூர், துலுக்கனூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் தனது நிலத்தை அளவீடு செய்வதற்காக நில அளவையர் ஜீவிதாவை அணுகியுள்ளார். அப்போது, ஜீவிதா அவரிடம் லஞ்சமாகக் ₹10,000 கேட்டுள்ளார். இது குறித்துக் குமரேசன் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

போலீசாரின் திட்டப்படி, குமரேசன் ஜீவிதாவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தைப் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜீவிதாவைக் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் போலீசார், லஞ்சப் பணத்தையும் கைப்பற்றினர்.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் கண்ணன், லஞ்ச ஒழிப்புப் புகாரில் சிக்கிய ஜீவிதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளார்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!