"கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது" - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!"
"விஜய்யின் கருத்து தேர்தல் அரசியல்" - இலங்கை அமைச்சர் விஜித ஹேரத் பதில்!
கச்சத்தீவைத் திரும்பப் பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்று இலங்கை அமைச்சர் விஜித ஹேரத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜித ஹேரத், "கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது. தேர்தல் காலம் என்பதால் அரசியலுக்காக ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கின்றனர். அரசியலுக்காக கச்சத்தீவு குறித்துக் கூறப்படும் கருத்துகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
அவர் விஜய்யின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், "ஒரு நடிகர் அரசியல்வாதியாக மாறும்போது அவர் இதுபோன்ற கருத்துகளைக் கூறுவார். அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிப்பது இயல்புதான்" என்றும் தெரிவித்தார்.