`ஷாக்’ அடிக்கும் முன் தேதியிட்ட மின் கட்டண உயர்வு! - வலுக்கும் எதிர்ப்பு; போராட்டக் களமான புதுச்சேரி | Electricity tariff hike announced in Puducherry has turned the state into a protest zone

`ஷாக்’ அடிக்கும் முன் தேதியிட்ட மின் கட்டண உயர்வு! - வலுக்கும் எதிர்ப்பு; போராட்டக்
களமான புதுச்சேரி | Electricity tariff hike announced in Puducherry has
turned the state into a protest zone

அதன் தொடர்ச்சியாக அதற்கான மானியத் தொகையையும் அரசே செலுத்துகிறது. அதேபோன்று புதுச்சேரி மாநிலத்திலும் மக்கள் பயன்படுத்தும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்து, அதற்கான மானியத் தொகையையும் அரசே செலுத்த வேண்டும். அல்லது உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை முழுமையாக அரசு ரத்து செய்யவேண்டும். அனைத்து மாநிலங்களிலும் மின் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி மட்டுமே நுகர்வோர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில்தான் மின் கட்டணம், 10% ஒழுங்கு முறை கூடுதல் கட்டணம், 1 கிலோவாட்டுக்கு 35 ரூபாய் வீடுகளுக்கு நிரந்தரக் கட்டணம், கடைகளாக இருந்தால் 1 கிலோ வாட்டுக்கு 200 ரூபாய் நிரந்தரக் கட்டணம், கால தாமதக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நுகர்வோர்களிடமிருந்து கட்டணம் பெறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மின் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளமும் மின் கட்டணத்தில் சேர்க்கப்பட்டு மக்களிடம் வசூலிக்கிறார்கள். மின் துறை தனியார் மயமாக்குதலுக்காக திட்டமிட்டு அடாவடித்தனமான கட்டண உயர்வுகளை மக்கள் மீது அரசு திணிக்கிறது. அரசின் இந்த தகாத செயலை அ.தி.மு.க மக்களின் துணையோடு முறியடிக்கும்” என்றார்.

புதுச்சேரி திமுக அமைப்பாளர்,  எதிர்க்கட்சித் தலைவர் சிவா

புதுச்சேரி திமுக அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சிவா

எதிர்க்கட்சித் தலைவரும், புதுச்சேரி தி.மு.க மாநில அமைப்பாளருமான சிவா, “மின்துறையை தனியார் மயமாக்க கூடாது என்று மின்துறை ஊழியர்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்ததால், அந்த முயற்சியில் இருந்து பின் வாங்கியது அரசு. ஆனால் தற்போது அதற்கு பழிவாங்கும் விதமாக, மின்கட்டணத்தை உயர்த்தி, தாங்கள் மக்கள் விரோத அரசுதான் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள். அதற்கு மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையத்தை துணைக்கு அழைப்பது இவர்களின் கையாலாகாதத்தனத்தை காட்டுகிறது. கடந்த ஜூன் மாதம் அரசு இந்த முயற்சியை எடுத்த பொழுதே மக்கள் கிளர்ந்தெழுந்து எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பின்வாங்கியவர்கள் மீண்டும் கட்டண உயர்வு அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளனர். எல்லாவற்றுக்கும் ஒன்றிய அரசுக்கு ஒத்து ஊதுவதை புதுச்சேரி  அரசு நிறுத்த வேண்டும். ஒருபுறம் இரட்டை இன்ஜின் ஆட்சி என்று கூறிக்கொண்டு மறுபுறம் இரு அரசும் இணைந்து மக்களை வாட்டி வதைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

Source link

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks