மயங்கி விழுந்து பெண் உள்பட 2 பேர் பலி.!

மயங்கி விழுந்து பெண் உள்பட 2 பேர் பலி.!

சேலம்:

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த 17-ந் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அந்த பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலனின்றி, 18-ந் மாலை இறந்து போனார்.

உயிரிழந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதேபோல், சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் கடந்த 2-ந் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், வயிற்று வலியால் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 9-ந் தேதி, அந்த நபர் உயிரிழந்தார்.

அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விபரம் தெரியவில்லை. இதுகுறித்த புகார்களின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks