PAK vs SL: இறுதிவரை த்ரில்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை.! தனி ஆளாக போராடிய பாகிஸ்தான் கேப்டன்!

PAK vs SL: இறுதிவரை த்ரில்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை.! தனி ஆளாக போராடிய பாகிஸ்தான் கேப்டன்!
News Image
<p>மகளிர் கிரிக்கெட்டின் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் மோதிய இந்த தொடரில் இந்திய மகளிர் அணி அரையிறுதியில் வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குச் சென்றது.</p> <h2><strong>பாகிஸ்தான் - இலங்கை:</strong></h2> <p>இந்த நிலையில், இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுவது யார்? என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதிப்போட்டி துபாயில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதியது.</p> <h2><strong>கேப்டன் சனா போராட்டம்:</strong></h2> <p>முதலில் ஆடிய பாகிஸ்தான் அணிக்காக முனிபா அலி 2 ரன்னில் அவுட்டாக, குல் பெரோஷா ஆடினார். ஆனால், ஜுல்பிகுர் அதிரடியாக ஆடினார். அவர் 16 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்து அவுட்டாக அடுத்து வந்த ஆயிஷா, சதாஃப் ஷமாஸ் அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் அவுட்டானார்கள். அப்போது கேப்டன் ஃபாத்திமா சனா களமிறங்கினார்.</p> <p>மறுமுனையில் பெரோஷா நிதானமாகவே ஆட ஃபாத்திமா அதிரடியாக ஆடினார். நிதானம் காட்டிய பெரோஷா 32 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து அவுட்டாக, ஃபாத்திமா சனா கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடியதால் பாகிஸ்தான் சற்று கெளரவமான இலக்கை நிர்ணயித்தது.&nbsp;</p> <h2><strong>தடுமாறிய இலங்கை:</strong></h2> <p>பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் கேப்டன் சனா 36 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். இலங்கை கேப்டன் அத்தப்பட்டு, ப்ரபோதா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p> <p>131 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்று களமிறங்கிய இலங்கைக்கு பாகிஸ்தான் கேப்டன் சனா சவால் அளித்தார். அவரது பந்துவீச்சில் இலங்கை கேப்டன் அட்டப்பட்டு 5 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த சஞ்சனா டக் அவுட்டானார். மறுமுனையில் தொடக்க வீராங்கனை இமாஷா நிதானமாக ஆட ஹாசினி 3 ரன்னில் அவுட்டானார்.</p> <p>31 ரன்களில் 3 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்தது. அடுத்து வந்த ஹர்ஷிதா பொறுப்புடன் ஆடினார். மறுமுனையில் நிதானமாக ஆடி அணியை மீட்க உதவிய இமாஷா 24 ரன்னில் அவுட்டானார். 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இருந்த இலங்கைக்காக ஹர்ஷிதா - கவிஷா ஜோடி சேர்ந்தனர்.</p> <h2><strong>காப்பாற்றிய ஃபினிஷர்ஸ்:</strong></h2> <p>வெற்றி எளிது என்று கருதிய பாகிஸ்தானை இவர்கள் பந்தாடினர். இருவரும் ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பி ஓரிரு ரன்களாக எடுத்தனர். இவர்களின் ஆட்டத்தால் இலங்கை 100 ரன்களை எட்டியது. அப்போது ஹர்ஷிதாவை கேப்டன் ஃபாத்திமா அவுட்டாக்கினார். &nbsp;ஹர்ஷிதா 31 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் கவிஷாவையும் கேப்டன் ஃபாத்திமா அவுட்டாக்கினார். அவர் 33 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்திருந்தார்.</p> <p>இதனால், பாகிஸ்தான் கை ஓங்கியது. ஆனால், நிலக்ஷிகா - &nbsp;கெளஷனி ஜோடி இலங்கையை காப்பாற்றியது. இருவரும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி ஆட்டத்தை இலங்கைக்கு சாதகமாக மாற்றினார்.</p> <h2><strong>இறுதிப்போட்டியில் இலங்கை:</strong></h2> <p>17வது ஓவர் முடிவில் 109 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த இலங்கை 19வது ஓவரின் முடிவில் வெற்றி பெற்றுவிட்டது. நிலக்ஷிகா 10 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 18 ரன்களும், கெளஷனி 4 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.4 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்த இலங்கை இறுதிப்போட்டிக்குச் சென்றது. பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா 4 விக்கெட் வீழ்த்தினார்.&nbsp;&nbsp;சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை நாளை மோதுகின்றனர்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks