
<p style="text-align: justify;">தாம்பரம் மாநகராட்சியில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, அமைச்சர் சரத்தால் திறக்கப்பட்ட அசோக சின்ன சிலைக்கு அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து டெண்டர் விடப்பட்டதாகவும் இதிலும் இன்னொன்றிலும் சேர்த்து 45 லட்சம் ரூபாய் வரை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்திரன் மற்றும் அதிகாரிகள் ஊழல் செய்துள்ளதாகவ் இன்று அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது.<strong><em> </em></strong></p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">கட்டி முடிக்கப்பட்டதிற்கு மீண்டும் டெண்டர்?<a href="https://t.co/LRXU10pMDY">https://t.co/LRXU10pMDY</a> | <a href="https://x.com/hashtag/MinisterSarath?src=hash&ref_src=twsrc%5Etfw">#MinisterSarath</a> <a href="https://x.com/hashtag/AshokaEmblem?src=hash&ref_src=twsrc%5Etfw">#AshokaEmblem</a> <a href="https://x.com/hashtag/Tambaram?src=hash&ref_src=twsrc%5Etfw">#Tambaram</a> <a href="https://x.com/hashtag/Bribe?src=hash&ref_src=twsrc%5Etfw">#Bribe</a> <a href="https://x.com/hashtag/TNnews?src=hash&ref_src=twsrc%5Etfw">#TNnews</a> <a href="https://x.com/hashtag/TVK?src=hash&ref_src=twsrc%5Etfw">#TVK</a> <a href="https://x.com/hashtag/ABPnadu?src=hash&ref_src=twsrc%5Etfw">#ABPnadu</a> <a href="https://t.co/ATIoG80h3W">pic.twitter.com/ATIoG80h3W</a></p>
— ABP Nadu (@abpnadu) <a href="https://x.com/abpnadu/status/2099752295076622781?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<p>
<script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p style="text-align: justify;"><strong><em>தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்</em></strong></p>
<p style="text-align: justify;">இது தொடர்பாக விளக்கம் கேட்க மாநகராட்சி ஆணையர் பாலசந்திரனை தொடர்புகொண்டோம். அப்போது பேசிய அவ<span style="color: #ba372a;"><em><strong>ர் ‘தாம்பரம் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட அசோக சின்னம் சிலை முழுக்க, முழுக்க CSR நிதியில் கட்டப்பட்டது என்றும், அதற்காக விடப்பட்ட டெண்டரும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது எனவும் குறிப்பிட்டார். அதோடு, இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதை ஆன்லைனில் அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டார்கள் என்றும், அறப்போர் இயக்கம் சொல்லும் குற்றச்சாட்டு முழுக்க, முழுக்க தவறானது எனவும் குறிப்பிட்ட பாலசந்திரனிடம், ஏற்கனவே திறக்கப்பட்டதற்கு எப்படி ஒரு மாதம் கழித்து டெண்டர் வெளியிடப்பட்டது? அது CSR நிதி என்றால் ஏன் டெண்டர் ஆன்லைன் வரை சென்றது? என அடுத்த கேள்வியை கேட்டபோது, இது தொடர்பாக விரிவாக பேசுகிறேன் என்று தொலைபேசி அழைப்பை கட் செய்துவிடார் பாலசந்திரன்</strong></em></span>.</p>
<p style="text-align: justify;"><em><strong>பணியிடமாற்றம் ?</strong></em></p>
<p style="text-align: justify;">தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, அறப்போர் இயக்கம் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருவதாகவும், அதற்கு முன்னர் மாநகராட்சி ஆணையர் பாலசந்திரனை பணியிட மாற்றம் செய்வது குறித்தும் முக்கிய அதிகாரிகள்ஆலோசித்து வருவதாகவும் கூறினர். </p>
Source: Read Full Article