
<header class="main__header">
<div class="temp__container">
<div class="nav__section">
<h2 class="it__logo"><strong>கான்கிரீட் கட்டடங்களில் கறையான் பாதிப்பு ஏற்படுமா ?</strong></h2>
</div>
</div>
</header>
<div id="main" class="section__cities sectionId__1206628 pagenode__2482065 pagetype__video" aria-hidden="false">
<div class="temp__container">
<div class="temp__layout">
<div class="content__section"><main class="main__content">
<div class="lhs__section">
<div class="videoCard__widget widgetgap">
<div class="video__grid">
<div class="videoplayer__widget widgetgap">
<div class="videodetails">
<div class="description">
<div class="clearfix text-formatted field field--name-body field--type-text-with-summary field--label-hidden field__item">
<p>புதிதாக வீடு கட்டும் போது ஒவ்வொரு நிலையிலும் சரியான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். நிலத்தை சமன்படுத்தி அதில் அஸ்திவாரத்துக்கான பணிகளை மேற்கொள்ளும் போது என்னென்ன விஷயங்களை எப்படி அணுக வேண்டும் என்பதிலேயே மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.</p>
<p>சமீப காலமாக பெரும்பாலான இடங்களில் தரமான முறையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக நினைக்கும் இடங்களில் கறையான் பாதிப்பு வருவதை பார்க்க முடிகிறது. கான்கிரீட் கட்டடங்களில் கறையான் பாதிப்பு ஏற்படுமா என்பதிலேயே பலருக்கும் குழப்பம் நிலவுகிறது.</p>
<p>பொதுவான மண்ணை பயன்படுத்தி வீடு கட்டும் போது தான் கறையான் பாதிப்புகள் ஏற்படும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால் , கான்கிரீட் கட்டடங்களிலும் , நிலத்துடன் இணைப்பு ஏற்படும் இடங்களில் கறையான் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.</p>
<h2><strong>" கறையான் தடுப்பு மருந்துகள் "</strong></h2>
<p>ஒரு நிலத்தில் அஸ்திவாரம் அமைத்து , தரைமட்டம் வரையிலான பணிகள் முடிக்கும் போது ஏற்படும் இடைவெளியை மண் கொட்டி நிரப்புகிறோம். இதற்கு களிமண் பயன்படுத்த கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.</p>
<p>இதனால், சரளை மண் போன்றவை இதற்கு பயன் படுத்தப்படுகின்றன. இந்நிலையில், அங்கு கொட்டப்படும் மண் நன்றாக இறுக்கம் அடைய வேண்டும் என்று தண்ணீர் ஊற்றப்பட்டு உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.</p>
<p>இவ்வாறு மண் கொட்டப்பட்ட நிலையில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு குழி , அடை அடி ஆழத்தில் தோண்ட வேண்டும். அதில் , கரையான் தடுப்பு மருந்து ஊற்றப்படும், இதனால், கறையான் தடுப்பு பணிகள் முடிந்துவிட்டதாக மக்கள் பரவலாக , நினைக்கின்றனர். ஆனால் , அஸ்திவாரத்துக்கான பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் மண் பகுதியில் கறையான் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும்.</p>
<h2><strong>"கட்டிடத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கலாம்"</strong></h2>
<p>'பிசிசி' கான்கிரீட் போட்ட பின்னும் அதன் ஓரங்களில் கறையான் தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும். இதற்கு அப்பால் , தரை மட்டம் வரையிலான கட்டு வேலை முடிந்த நிலையில் மண் கொட்டும் போது , ஒவ்வொரு அடுக்கிலும் கறையான் தடுப்பு மருந்துகள் தெளித்து , அதன் பின் அடுத்த அடுக்கு மண் கொட்டினால் , கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க உதவும்.</p>
<p>இதில் உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் கறையான் தடுப்பு பணிகளை மொத்த கட்டுமான பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும். இதற்கான செலவை ஆரம்பத்திலேயே பேசி முடித்தால் மட்டுமே கறையான் தடுப்பு நடவடிக்கைகள் பலன் கொடுக்கும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.</p>
<p>அஸ்திவாரத்துக்கான பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் மண் பகுதியில் கறையான் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும், அதன் பின் பிசிசி கான்கிரீட் போட்ட பின்னும் கறையான் தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும்</p>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</main></div>
</div>
</div>
</div>
Source: Read Full Article