பழைய குழம்பு வைத்ததால் ஆத்திரம் !! மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவனால் பரபரப்பு

பழைய குழம்பு வைத்ததால் ஆத்திரம் !! மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவனால் பரபரப்பு
News Image
<h2 dir="ltr"><strong>இன்று ஏன் சமைக்கவில்லை ? என்ன செய்தாய் ?</strong></h2> <p dir="ltr">திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். கட்டிடத் தொழிலாளியான இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும் , இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.</p> <p>இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் , முருகன் தனது மனைவி காஞ்சனா மற்றும் மகனுடன் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். முருகன் மற்றும் காஞ்சனா இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 7 - ஆம் தேதி இரவு முருகன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.</p> <p>அப்போது மனைவியிடம் சாப்பாடு போடும்படி கேட்ட நிலையில் காஞ்சனா, காலையில் சமைத்த சாப்பாடும் , முந்தைய நாள் செய்த கறிக் குழம்பும் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த முருகன், இன்று ஏன் சமைக்கவில்லை ? வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? ஏன் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறாய் ? எனக் கேட்டு காஞ்சனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முருகன், காஞ்சனாவை தாக்கியதில் அவர் மயங்கி வீட்டில் இருந்த படிக்கட்டில் விழுந்ததாக தெரிகிறது.</p> <h2><strong>தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகம்</strong></h2> <p>மது போதையில் இருந்த முருகன் , வீட்டில் இருந்த பச்சை நிற புடவையை பயன்படுத்தி காஞ்சனாவின் கழுத்தை நெரித்ததாகவும், பின்னர் அவர் புடைவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல சடலத்தை புடவையில் மாட்டி தொங்க விட்டுள்ளார்.</p> <p>பின்னர் கொலையை மறைப்பதற்காக புடவையை கத்தியால் அறுத்து விட்டு , காஞ்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி சத்தமிட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆதமங்கலம்புதூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காஞ்சனாவின் உடலை கைப்பற்றி , உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p> <h2><strong>பிரேத பரிசோதனை அறிக்கை</strong></h2> <p>காஞ்சனாவின் உடலில் காயங்கள் மற்றும் எலும்பு முறிவு இருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து , அவரது மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் முருகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது , பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உண்மை என முருகன் ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.</p> <p>இதனால், மனைவியை தாக்கி கொலை செய்து விட்டு, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதாக கூறப்படும் முருகனை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து முருகன் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த ஆதமங்கலம்புதூர் போலீஸார் , அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியை தாக்கி கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவரே நாடகமாடியதாக கூறப்படும் சம்பவம் கேட்டவரம்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks