காட்டாங்குளத்தூர் சிக்னலில் நள்ளிரவு பயங்கர விபத்து! அமைச்சர் காரில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

காட்டாங்குளத்தூர் சிக்னலில் நள்ளிரவு பயங்கர விபத்து! அமைச்சர் காரில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!
News Image
<p style="text-align: justify;"><strong>சென்னை:</strong> செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் நள்ளிரவில் நடைபெற்ற சாலை விபத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சருக்குச் சொந்தமானதாக கூறப்படும் மாருதி எர்டிகா கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <h3 style="text-align: justify;">கோயில் திருவிழாவுக்கு சென்ற இளைஞர்</h3> <p style="text-align: justify;">காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் இறையன்பு (26). இவர் நள்ளிரவு தனது ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் நடைபெற்ற துலுக்கத்தம்மன் கோயில் திருவிழாவிற்குச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. காட்டாங்குளத்தூர் சிக்னல் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற மாருதி எர்டிகா கார், இறையன்பு சென்ற இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியுள்ளது.</p> <h3 style="text-align: justify;">தலையில் பலத்த காயம் &ndash; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h3> <p style="text-align: justify;">கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இறையன்புவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு அவசர சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி இறையன்பு பரிதாபமாக உயிரிழந்தார்.</p> <p style="text-align: justify;">இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இளைஞரின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <h3 style="text-align: justify;">இரண்டு வாகனங்களும் பறிமுதல்</h3> <p style="text-align: justify;">விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் தொடர்புடைய மாருதி எர்டிகா கார் மற்றும் ஹோண்டா டியோ இருசக்கர வாகனம் ஆகிய இரு வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விபத்து எவ்வாறு ஏற்பட்டது, வாகனங்களின் வேகம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.</p> <h3 style="text-align: justify;">கார் யாருக்கு சொந்தமானது?</h3> <p style="text-align: justify;">உயிரிழந்த இறையன்புவின் தந்தை சிவக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய மாருதி எர்டிகா கார், அமைச்சர் ஜெகதீஸ்வரிக்குச் சொந்தமானது என்பது அவரது தேர்தல் வேட்புமனுத் தாக்கல் பிரமாணப் பத்திரத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விபத்து நடைபெற்றபோது அமைச்சர் காரில் பயணம் செய்யவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. காரை மதுரையைச் சேர்ந்த சின்ன அக்னி (28) என்பவர் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு &ndash; விசாரணை தீவிரம்</h3> <p style="text-align: justify;">இந்த விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் சின்ன அக்னி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம், சிக்னலில் அப்போது நிலவிய போக்குவரத்து சூழல், வாகனத்தின் இயக்கம் உள்ளிட்ட விவரங்களை காவல்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். காட்டாங்குளத்தூர் பகுதியில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks