
<h2>மிசா - அமைச்சர் சர்ச்சை பேச்சு</h2>
<p>தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தை கைது செய்யப்பட்டதை விமர்சித்து பேசியிருந்தார். இதனையடுத்து அமைச்சர் சி.டி.நிர்மல் குமாரும் <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லையெனவும், அப்போது திருட்டு, பெண் வழக்குகளில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சு திமுகவினரை கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> மற்றும் அமைச்சர் சி. டி. ஆர்.நிர்மல் குமார் பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பாக போராட்டம் நடைபெற்றது.</p>
<h2>சிடிஆரை விமர்சித்த ஆ.ராசா</h2>
<p>அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரை கடுமையாக விமர்சித்தார். அந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இதே போல திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழியும் ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளியிட்ட பதிவில், யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். </p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் <br />‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில்<br />கேள்விக்குள்ளாக்கியதில்…</p>
— A RAJA (@dmk_raja) <a href="https://x.com/dmk_raja/status/2098986160177737797?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote>
<p>
<script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h3> உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்</h3>
<p>இந்த நிலையில் இது தொடர்பாக திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிட்ட பதிவில், தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்; என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என அந்த பதிவில் ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/technology/check-sim-cards-registered-in-your-name-274188" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
Source: Read Full Article