
<p><span dir="auto">ட்ரம்பின் பொருளாதாரத் தடைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் தனது சொந்த பொருளாதார நிலைமையையே அமெரிக்காவின் மீது சுமத்தியுள்ளது. இது, தனது சொந்த நெருக்கடியை மறைப்பதற்கும், அதிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்குமான ஒரு முயற்சி மட்டுமே என்று ஈரான் வெளிப்படையாகக் கூறியுள்ளது. இது குறித்த தனது அறிக்கையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார்.</span></p>
<h2><span dir="auto">“சொந்த நாட்டு பிரச்னையை திசைதிருப்ப அமெரிக்கா முயற்சி“</span></h2>
<p><span dir="auto">தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அராக்சி, "'பொருளாதார நெருக்கடி நாள்' என்று அழைக்கப்படுவது, உண்மையில் கணக்கில் வராத கடன் மற்றும் வேகமாக அதிகரித்து வரும் வட்டிச் செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அமெரிக்காவின் சொந்த நெருக்கடியிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கான ஒரு முயற்சியாகும். தோல்வியுற்ற கொள்கைகளுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுப்பது, மேலும் தோல்விக்கும், ஈரானியர்களின் பகைமைக்கும் மட்டுமே வழிவகுக்கும். அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதம் உலகெங்கிலும் உள்ள பொருளாதாரம் மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது," என்று கூறியுள்ளார்.</span></p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">The so-called “Economic D-Day” is a diversion from America's own crisis: unprecedented debt & surging interest costs. <br /><br />Doubling down on failed policies will only bring further defeat—and enmity of Iranians. US economic terrorism threatens global economy and sovereignty worldwide <a href="https://t.co/Qj5SzVBjvX">pic.twitter.com/Qj5SzVBjvX</a></p>
— Seyed Abbas Araghchi (@araghchi) <a href="https://x.com/araghchi/status/2090316936206790973?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<p><span dir="auto">
<script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</span></p>
<p><span dir="auto">மேலும், அல் ஜசீரா அறிக்கையின்படி, தோல்விக்குப் பிறகு அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம் உதவிக்காக கெஞ்சுகிறது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். </span></p>
<h2><span dir="auto">அமெரிக்க அரசின் கடன் முதல் முறையாக 40 டிரில்லியன் டாலரை தாண்டியது</span></h2>
<p><span dir="auto">முன்னதாக, அமெரிக்க அரசாங்கத்தின் கடன் முதல் முறையாக 40 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாதது. ஏனெனில், ஆண்டுதோறும் ஏற்படும் வட்டி செலவுகள் தற்போது ராணுவச் செலவினங்களை விட அதிகமாகிவிட்டன.</span></p>
<h2><span dir="auto">‘Economic D-Day‘ என்ற பெயரில் அமெரிக்கா ஈரான் மீது விதித்த தடை என்பது என்ன.?</span></h2>
<p><span dir="auto">ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவிக்கவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்</span><span dir="auto"> முடிவைச் சுற்றியே இந்த முழு சர்ச்சையும் சுழல்கிறது. அவர் இதை 'பொருளாதார டி-டே' (Economic D-Day) என்று குறிப்பிடுகிறார். இதன் கீழ், ஈரானை ஆதரிக்கும் எந்தவொரு நாடும் அல்லது நிதி நிறுவனமும், கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்கும் என்று உலக நாடுகளை அமெரிக்கா எச்சரித்துள்ளது. </span></p>
<p><span dir="auto">ஈரானின் எண்ணெய் வர்த்தகம், பணப் பரிமாற்றங்கள், போலி நிறுவனங்கள் மற்றும் நிதி வலையமைப்புகளை முழுமையாக தடைசெய்து, அந்நாட்டை தனிமைப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அமெரிக்கா கூறுகிறது.</span></p>
<p> </p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/do-you-know-cardamom-consumption-for-15-days-benefits-the-body-271876" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article