Crime News: கணவனை கொன்று உடலை துண்டுகளாக்கிய மனைவி..! குடலால் சிக்கியது எப்படி? கொடூர சம்பவம்

Crime News: கணவனை கொன்று உடலை துண்டுகளாக்கிய மனைவி..! குடலால் சிக்கியது எப்படி? கொடூர சம்பவம்
News Image
<p><strong>Crime News:</strong> கணவனை கொன்று உடலை துண்டுகளாக வெட்டிய மனைவி, வீட்டின் உரிமையாளரிடம் சிக்கியதால் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.</p> <h2><strong>கணவனை துண்டுகளாக்கிய மனைவி?</strong></h2> <p>ஹரியானா மாநிலம் குருக்&zwnj;ஷேத்ராவில் கணவனை கொன்று உடலை துண்டுகளாக்கி, அவற்றை அப்புறப்படுத்த மனைவி முயன்றுள்ளார். பையில் இருந்த குடலை கண்டு வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியடைய, அந்த பெண் வாடகை வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-choose-a-wristwatch-details-in-pics-271888" width="631" height="381" scrolling="no"></iframe></p> <h2>சரிந்து கிடந்த குடல்.. மனைவி கொடூரம்</h2> <p>பெஹோவா சாலையில் ராஜ் பேலஸ் எனும் வாடகை வீட்டில் ராஜேஷ் மற்றும் விம்லா தேவி தம்பதியினர் வசித்து வந்தனர். சம்பவம் நடந்த நாளன்று மாலை 5 மணியாளவில் சில மோசமான சத்தங்களை கேட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். விநோதமான கூக்குரலை கேட்டு, சந்தேகத்தின் பேரில் மாடியில் வாடகைக்கு தங்கியிருப்பவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் கண்டது, சினிமாக்களில் காண்பிக்கப்படும் மிகக் கொடூரமான கொலைக்கு சற்றும் குறைந்ததாக இல்லாமல் இருந்துள்ளது. ராச்ஜேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடக்க, அவரது அடிவயிற்றில் கடும் காயங்கள் இருந்துள்ளது. அவரது வயிற்றில் இருந்து சரிந்த கிடந்த குடலை, மனைவி விம்லா கையில் எடுத்து மீண்டும் உள்ளே நுழைக்க முயன்றுள்ளார். இதனை வீட்டின் உரிமையாளர் கண்டதும் , பயந்து பதற்றமடைந்த அந்த பெண் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.</p> <p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/GX0kNJCeY4w?si=MwuHVQrgnMFsx0Qx" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <h2><strong>யார் இந்த ராஜேஷ்-விம்லா?</strong></h2> <p>மாடியில் இருந்து கீழே குதித்ததில் அந்த பெண் காயமடைந்தார். இதையடுத்து அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடமிருந்து தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை தகவல்களின்படி, உத்தரபிரதேச மாநிலம் சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள தாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். கடந்த ஓராண்டாக மனைவி விம்லாவுடன் குருக்&zwnj;ஷேத்ராவில் அவர் தங்கி வந்துள்ளார். வீட்டின் அருகே இயங்கி வரும் தண்ணீர் விற்பனை நிறுவனத்தின் விநியோக பிரிவில் அவர் பணியாற்றி வந்துள்ளார்.</p> <p><a title="TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?" href="https://tamil.abplive.com/news/politics/if-water-resource-dept-transfer-officers-didnot-join-in-duty-wont-get-salary-tn-govt-warning-272193" target="_self">இதையும் படியுங்கள்: TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?</a></p> <h2><strong>மனைவி அரங்கேற்றிய கொடூர கொலை?</strong></h2> <p>வெளியாகியுள்ள தகவல்களின்படி,&nbsp;ராஜேஷின் வயிறு சுமார் 35 சென்டிமீட்டர் நீளத்திற்குக் கூர்மையான ஆயுதங்களால் ஆழமாக வெட்டப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அவரது குடல்கள் வயிற்றுக் குழியிலிருந்து வெளியே வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. கல்லீரலின் கணிசமான பகுதியும் வலது சிறுநீரகமும் காணாமல் போயுள்ளது.. இந்தக் காயங்கள் மற்றும் காணாமல் போன உறுப்புகள் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குற்றம் நடந்த இடத்திலிருந்து வெவ்வேறு அளவிலான மூன்று கத்திகளை கைப்பற்றியுள்ளனர்.&nbsp;</p> <h2><strong>கொலைக்கான காரணம் என்ன?</strong></h2> <p>வீட்டு உரிமையாளரின் தகவலின்படி, விம்லா பாரம்பரிய வைத்தியம் மற்றும் பேயோட்டுதல் தொடர்பான சடங்குகளிலும் ஈடுபடுவாராம், தம்பதியினர் அடிக்கடி சண்டையும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ராஜேஷின் கொலைக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ராஜேஷுக்கும் விம்லாவுக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும், அவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. அவர்களுடைய உறவுமுறை, முந்தைய தகராறுகள் மற்றும் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து காவல்துறை தற்போது விசாரித்து வருகிறது.</p> <p>&nbsp;</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks