டாடாவின் 'மேக் இன் இந்தியா' மாஸ் சம்பவம்: அமெரிக்க அதிநவீன ஏவுகணை இனி இந்தியாவிலேயே தயாரிப்பு!

டாடாவின் 'மேக் இன் இந்தியா' மாஸ் சம்பவம்: அமெரிக்க அதிநவீன ஏவுகணை இனி இந்தியாவிலேயே தயாரிப்பு!
News Image
<p style="text-align: justify;">இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் சுயசார்பை மேம்படுத்தும் வகையிலும், இருதரப்பு கூட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் வகையிலும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் (Tata Advanced Systems Limited) மற்றும் அமெரிக்காவின் 'ஜேவ்லின் ஜாயிண்ட் வென்ச்சர்' (Javelin Joint Venture) இடையே ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.</p> <p style="text-align: justify;">'ரேதியான்' (Raytheon) மற்றும் 'லாக்ஹீட் மார்ட்டின்' (Lockheed Martin) ஆகிய இரு முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் கூட்டு அமைப்பே இந்த ஜேவ்லின் அமைப்பாகும். இதன் மூலம், உலகின் மிகச் சிறந்த டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளில் ஒன்றான 'ஜேவ்லின் ஆல் அப் ரவுண்ட்' (Javelin All Up Round) ஏவுகணையை இந்தியாவிலேயே இணைந்து தயாரிப்பதற்கான வழிவகைகள் ஆராயப்படவுள்ளன.</p> <h3 style="text-align: justify;">ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் உற்பத்தித் திட்டம்</h3> <p style="text-align: justify;">தொழில்நுட்பத் திறன் மற்றும் உற்பத்தி ஆற்றல் குறித்த விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகே, இந்தியத் தயாரிப்பில் முதன்மைப் பங்காளியாக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஏவுகணையின் பாகங்களை உற்பத்தி செய்வதுடன், இந்தியாவில் அதற்கெனச் பிரத்யேகமான இறுதி அசெம்பிளி மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை (Final Assembly and Integration Facility) அமைப்பது குறித்து இரு தரப்பும் விரிவாக ஆய்வு செய்யும்.&nbsp;</p> <p style="text-align: justify;">இந்த உற்பத்தி மாதிரி அமெரிக்காவின் விநியோகச் சங்கிலியையும் இந்தியாவின் உற்பத்தி முறையையும் நேரடியாக இணைக்கிறது. அமெரிக்காவில் உள்ள அலாபாமா மற்றும் அரிசோனா ஆகிய இடங்களில் உற்பத்தி செய்யப்படும் முக்கியப் பாகங்கள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, இங்கு இறுதி ஒருங்கிணைப்பு செய்யப்படவுள்ளன.</p> <h3 style="text-align: justify;">பாதுகாப்புத் துறைக்கும் பிராந்தியத்திற்கும் கிடைக்கும் நன்மைகள்</h3> <p style="text-align: justify;">இந்தக் கூட்டு உற்பத்தி முறை இந்திய பாதுகாப்புத் துறையின் உயர் தொழில்நுட்ப உற்பத்தித் திறனை கணிசமாக உயர்த்தும். அதே வேளையில், இந்த ஒப்பந்தம் இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளின் பொருளாதார அளவீடுகளைச் சீரமைத்து செலவைக் குறைக்க உதவுவதுடன், புதிய உயர்தர வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இந்திய ஆயுதப் படைகளுக்குத் தேவையான இந்த நவீன ஏவுகணைகள் தடையின்றி, உடனுக்குடன் கிடைப்பதை உறுதி செய்வதோடு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலையான தன்மையை வலுப்படுத்தவும் இது பெரிதும் உதவும். மேலும், டாடா நிறுவனத்திற்கு மாற்றப்படும் இந்தத் தொழில்நுட்ப அறிவு, நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி சூழலமைப்பை மேலும் சுயசார்புடையதாக மாற்றும்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks