மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!

மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
News Image
<h2><strong>" அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் "</strong></h2> <p>SC- ST மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி செலவிடப்படாமல் பொது திட்டத்திற்கு &nbsp; செலவிடுவதை தடுக்கவும் அரசு ஒதுக்குகின்ற நிதி முழுமையாக இம்மக்களுக்கு செலவிட கோரியும், பஞ்சமி நிலம் மீட்பு தொடர்பாகவும் புரட்சி பாரதம் கட்சி சார்பில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.</p> <p>இந்த கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கரிகாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.</p> <h2><strong>அப்போது பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ;</strong></h2> <p>புரட்சி பாரதம் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மக்கள் பழங்குடியின மக்களுக்காண நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.</p> <p>இதில் கடந்த கால அரசு பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக அந்த நிதியை சரியான முறையில் செலவு செய்யாத தரவுகளை இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டு இருக்கிறார்கள். இது தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். அதற்கு இங்கு அத்தனை கட்சிகளும் சேர்ந்து தமிழக அரசை அழுத்தம் கொடுப்போம்.</p> <p>தமிழ்நாட்டுக்கும் அண்டை மாநிலமான கேரளா , கர்நாடகா , ஆந்திராவுக்கும் நமக்கும் முக்கியமான பிரச்சனை நீர் பிரச்சனை தான். கேரளாவிடம் முல்லைப் பெரியாறு பிரச்சனை , கர்நாடகாவில் காவேரி பிரச்சனை. மேகதாது கட்டக் கூடாது என்று நிலைப்பாடு எடுத்தோம்.</p> <h2><strong>" அரசு வேலை வழங்க வேண்டும் "</strong></h2> <p>கர்நாடகாவில் சமீபத்தில் மூன்று தமிழர்களை அங்கு கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்கள் வனத்துறை சார்ந்தவர்கள். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஐவர் குழு அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தது. தரவுகளை சேகரித்து இருக்கிறார்கள் அந்த நான்கு பேரும் மாடு காணவில்லை என்று காட்டுக்குள் சென்று இருக்கிறார்கள். மூன்று நபர்களை சுட்டு இருக்கிறார்கள் ஒருவர் தப்பித்து வந்து அவர் தான் சொன்னார்.</p> <p>அவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள் குடிசையில் வாழ்ந்து வருகிறார்கள் அப்படிப்பட்ட சூழலில் மான் வேட்டைக்கு போனார்கள் பொய் சொல்கிறார்கள் இதற்கு CBI விசாரணை வேண்டும். ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.</p> <p>இது கர்நாடக மாநில பிரச்சினை கிடையாது. கர்நாடகா இந்தியாவில் தான் இருக்கிறது தமிழர்கள் உலகத்தில் எங்கு பாதித்தாலும் நாங்கள் கேட்போம். ஆந்திராவில் 20 பேர் செம்மரம் வெட்டினார்கள் என்று கொலை செய்யப்பட்டார்கள்.</p> <p>அப்பொழுது முதன் முதலில் நாங்கள் சென்றோம் வழக்கு பதிவு செய்தார்கள் ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் எங்கள் வழக்கறிஞர் பாலு வழக்கு பதிவு செய்தார். எல்லாம் நாங்கள் கேட்கக் கூடாதா ? யார் வேண்டுமானாலும் கேட்கலாம் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.</p> <h2><strong>" அழுத்தம் கொடுக்க வேண்டும் "</strong></h2> <p>மேகதாது அணை விவகாரத்தில் நாங்கள் எத்தனை முறை சொல்லி பார்த்து விட்டோம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இது தமிழக வெற்றிக் கழக பிரச்சனையோ , காங்கிரஸ் பிரச்சனையோ இல்லை. இது தமிழ்நாட்டின் பிரச்சனை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் தலைவர்களை பிரதமர் மோடியிடம் அங்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.</p> <p>நான் தனிப்பட்ட முறையில் சென்று அழுத்தம் கொடுப்பது வேறு அத்தனை கட்சிகளும் எம். பி , எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் நீர்வளத்துறை அமைச்சர் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.</p> <p>கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் கடந்த மூன்று மாதத்தில் மூன்று முறை டெல்லிக்கு சென்று இருக்கிறார் ஆனால் இங்கு நாம் ஒரு கூட்டம் கூட நடத்தவில்லை. இரண்டு மாதத்தில் மூன்று அனைத்து கட்சி கூட்டத்தை கர்நாடகா அரசு நடத்தியுள்ளது. இதில் சட்டப் போராட்டம் அரசியல் போராட்டம் செய்ய வேண்டும்.</p> <h2><strong>" மாணிக்கம் தாகூர் அரசியல் செய்கிறார் "</strong></h2> <p>தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அவர்கள் தலைவர் ராகுல் காந்தியிடம் கேட்க வேண்டியது தானே ? அந்தமானில் கிரேட் நிக்கோபர் திட்டத்தில் காடுகளை அழிக்கின்ற திட்டம் என அந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லும் ராகுல் காந்தி மேகதாது மட்டும் என்னவாம் 2,500 ஏக்கர் காட்டை அழிக்கின்ற திட்டம். அந்தமானுக்கு ஒரு நியாயம் கர்நாடகாவிற்கு ஒரு நியாயமா ? காங்கிரஸ் தான் அங்கு இருக்கிறார்கள் ,&nbsp; சிவகுமார் குழந்தையை கிள்ளுவாராம் , மாணிக்கம் தொட்டில் ஆட்டுவாரம் தமிழ்நாட்டில்.</p> <h2><strong>"சுற்றறிக்கை அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை"</strong></h2> <p>மாணவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று எப்படி சொல்ல முடியும். இந்த தமிழக வெற்றிக்கான அரசிற்கு அதிகமாக வாக்களித்தது மாணவர்களும் மாணவர்களை சார்ந்தவர்களும் அதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.</p> <p>உலகம் முழுவதும் மாணவர்கள் பிரச்சனைக்கு போராட்டம் தான் செய்வார்கள். தமிழ் நாட்டில் தமிழுக்காக மாணவர்கள் போராடி தான் திமுக ஆட்சிக்கு வந்தது அப்படிப்பட்ட மாணவர்களை போராட்டம் செய்யக் கூடாது என்று சொல்வது யார் தடுக்கிறார்கள். இது மிகப் பெரிய தவறான சுற்று அறிக்கை.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks