சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு: புரட்டாசி மாத பூஜைக்கான முக்கிய தேதி அறிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு: புரட்டாசி மாத பூஜைக்கான முக்கிய தேதி அறிவிப்பு!
News Image
<p style="text-align: justify;">கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெரியார் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1535 அடி உயரத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. புகழ்பெற்ற இக்கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலங்களில் பக்தர்கள் இருமுடி கட்டி, 41 நாட்கள் கடும் விரதமிருந்து பதினெட்டு படிகள் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/30/85f1df24950f8837a2232ec8dfa1400a1788083807370193_original.JPG" /></p> <p style="text-align: justify;">ஜாதி, மத பேதமின்றி அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படும் மிகச்சில கோவில்களில் இதுவும் ஒன்று. ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் ஏறும் இந்த 18 படிகளும், ஆன்மீகத்தில் 18 விதமான தத்துவங்களை அல்லது படிகளைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. வழக்கமாக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் நாளும் (முதல் 5 நாட்களுக்கு) மாதாந்திர பூஜைக்காகத் திறக்கப்படுவது வழக்கம். தொடர்ந்து 5 நாட்கள் வழிபாடு நடைபெறும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.</p> <p style="text-align: justify;">இந்த நிலையில், கடந்த சில தினங்களாக ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. அடுத்ததாக புரட்டாசி மாத பூஜைக்காக வருகிற செப்டம்பர் மாதம் 16-ந் தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.&nbsp; மறுநாள் முதல் 28-ந் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.</p> <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/30/92f996161d2f179a3fd5467ce12477f11788083759692193_original.JPG" /></p> <p style="text-align: justify;">திருவோணம் பண்டிகையான 26-ந் தேதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்பட்டது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் விருந்தை உண்டு மகிழ்ந்தனர். இந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். இந்நிலையில், ஓணம் பண்டிகைக்கான 4 நாள் சிறப்பு பூஜைகள் அனைத்தும் நேற்றுடன் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 10 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை முறைப்படி அடைக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. புரட்டாசி மாத பூஜைக்காக <a title="சபரிமலை" href="https://tamil.abplive.com/topic/sabarimala" data-type="interlinkingkeywords">சபரிமலை</a> கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks