வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!

வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
News Image
<p style="text-align: justify;">சென்னையின் வடபகுதியான வியாசர்பாடியில் உள்ள Old Goodshed Road Railway குளம் மற்றும் கல்யாணபுரம் குளம் ஆகிய இரண்டு நீர்நிலைகளை சுற்றுச்சூழல் ரீதியாக மறுசீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இடங்களாக மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் Urban Challenge Fund (UCF) திட்டத்தின் கீழ் இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன.&nbsp;</p> <h3 style="text-align: justify;">9.6 ஏக்கராக விரிவடைந்த ரயில்வே குளம்</h3> <p style="text-align: justify;">வியாசர்பாடி Old Goodshed Road Railway Pond பகுதி முன்பு ஆக்கிரமிப்புகளால் சுருங்கி சுமார் 2.28 ஏக்கர் அளவிலேயே காணப்பட்டது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் மூலம் குளத்தின் பரப்பளவு சுமார் 9.5 முதல் 9.64 ஏக்கர் வரை விரிவடைந்துள்ளது. மேலும், குளத்தில் இருந்த ஆக்கிரமிப்பு தாவரங்கள் மற்றும் முந்தைய மெட்ரோ ரயில் பணிகளின்போது தேங்கிய கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. கரைகள் பலப்படுத்துதல் மற்றும் மழைநீர் வரத்து கால்வாய் அமைப்பது போன்ற அடிப்படை நீரியல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.&nbsp;</p> <h3 style="text-align: justify;">1.17 லட்சம் கன மீட்டர் தண்ணீரை சேமிக்க திட்டம்</h3> <p style="text-align: justify;">மறுசீரமைக்கப்படும் இந்த குளம் முழுமையாக மேம்படுத்தப்பட்ட பின்னர் சுமார் 1.17 லட்சம் கன மீட்டர் தண்ணீரை சேமிக்கும் திறனை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கனமழை காலங்களில் அதிகப்படியான மழைநீரை சேமித்து, சுற்றுப்புற தாழ்வான பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை குறைக்க முடியும். குறிப்பாக நேரு நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் மழைக்கால நீர்த்தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்பை குறைப்பதில் இந்த நீர்நிலை முக்கிய பங்கு வகிக்கும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது.&nbsp;</p> <h3 style="text-align: justify;">குளத்தை சுற்றி நடைபாதை, சைக்கிள் பாதை!</h3> <p style="text-align: justify;">நீர்நிலையின் அடிப்படை மறுசீரமைப்பு பணிகளுடன், அதன் சுற்றுப்புறத்தையும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குளத்தின் கரையை ஒட்டி நடைபாதை மற்றும் சைக்கிள் ஓட்டும் பாதை, மேம்படுத்தப்பட்ட நுழைவுவாயில்கள், பொதுமக்கள் அமரும் இருக்கைகள், சோலார் விளக்குகள், வழிகாட்டி பலகைகள் மற்றும் நுழைவு வளாகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளத்தை எளிதாக அணுகும் வகையில் தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.&nbsp;</p> <h3 style="text-align: justify;">பறவைகளுக்கான வாழ்விடமும் உருவாகிறது</h3> <p style="text-align: justify;">இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குளத்தின் கரைகளில் உள்நாட்டு மற்றும் நீர்நிலையைச் சார்ந்த தாவரங்கள் நடவு செய்யப்படுவதுடன், பறவைகள் கூடு அமைக்கும் பகுதிகள், ஈரநிலப் பகுதிகள் மற்றும் உயிரினப் பன்மைத்துவ மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் குளம் வெறும் மழைநீர் சேமிப்பு பகுதியாக இல்லாமல், நகர்ப்புறத்தில் இயற்கைச் சூழலை பாதுகாக்கும் முக்கியமான நீர்நிலையாக மாற்றப்பட உள்ளது.&nbsp;</p> <h3 style="text-align: justify;">குழந்தைகள் விளையாடவும், உடற்பயிற்சி செய்யவும் வசதி</h3> <p style="text-align: justify;">பொதுமக்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், பார்வையாளர் தளங்கள் (Viewing Decks), திறந்தவெளி சமூக நிகழ்வுகளுக்கான இடங்கள் உள்ளிட்ட வசதிகளும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வேலி மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து, எதிர்காலத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.&nbsp;</p> <h3 style="text-align: justify;">முதலில் விரிவான ஆய்வு; பின்னர் முழுமையான திட்டம்</h3> <p style="text-align: justify;">இந்தத் திட்டத்திற்காக நியமிக்கப்படும் ஆலோசகர்கள் முதலில் குளங்களின் தற்போதைய உடல் மற்றும் சுற்றுச்சூழல் நிலை, நிலப் பயன்பாடு, ஆக்கிரமிப்புகள், மழைநீர் வடிகால் இணைப்புகள் மற்றும் பொதுமக்கள் அணுகும் முறைகள் குறித்து ஆய்வு செய்வார்கள். அதன் அடிப்படையில் மாஸ்டர் பிளான், வடிவமைப்பு மற்றும் ஆரம்பகட்ட செலவு மதிப்பீடு உள்ளிட்டவை தயாரிக்கப்படும். மேலும், உள்ளூர் குடியிருப்பாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தி, பொதுமக்களின் தேவைகளையும் திட்டத்தில் கருத்தில் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p> <h3 style="text-align: justify;">சென்னையில் 246 குளங்களை பராமரிக்கும் மாநகராட்சி</h3> <p style="text-align: justify;">சென்னை மாநகராட்சி தற்போது மாநகரப் பகுதியில் 246 குளங்களை பராமரித்து வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 70 முதல் 80 நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை சுமார் 230 குளங்களின் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாசர்பாடியில் மேற்கொள்ளப்பட உள்ள இந்தத் திட்டம், நகரின் நீர்நிலைகளை பாதுகாப்பதுடன், மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் ரீசார்ஜ் மற்றும் வெள்ளத் தடுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையிலான நகர்ப்புற சுற்றுச்சூழல் திட்டமாக பார்க்கப்படுகிறது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks