24 மணி நேரமும் குடிநீர் சப்ளை! தாம்பரம் மாநகராட்சியின் மெகா திட்டம்! எப்போது கிடைக்கப்போகிறது?

24 மணி நேரமும் குடிநீர் சப்ளை! தாம்பரம் மாநகராட்சியின் மெகா திட்டம்! எப்போது கிடைக்கப்போகிறது?
News Image
<p style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>Tambaram Desalination Plant Water Distribution:</strong></span> சென்னை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 24 மணி நேரமும் தடையில்லா குடிநீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் (TNUIFSL) தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 2023-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை (DPR) புதுப்பித்து, திட்டத்திற்கான அடிப்படை பணிகளை மேற்கொள்வதற்காக ஆலோசகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் குடிநீர் திட்டமானது அரசு மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பு (PPP) மாதிரியின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.</p> <h3 style="text-align: justify;">தற்போதைய குடிநீர் விநியோகச் சவால்கள்</h3> <p style="text-align: justify;">தற்போது தாம்பரம் பகுதியில் குடிநீர் விநியோகம் பல்வேறு நீர் ஆதாரங்கள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்து இயங்கி வருகிறது. இதனால் சீரற்ற குடிநீர் விநியோகம், குறைந்த அளவிலான குடிநீர் கிடைப்பது மற்றும் விநியோகக் குழாய்களில் அழுத்தமின்மை போன்ற பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. இத்தகைய குறைபாடுகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில், மாநகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் தேவையை கணக்கில் கொண்டு பழைய திட்ட அறிக்கை முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.</p> <h3 style="text-align: justify;">மூன்று கட்டங்களாகச் செயல்படும் திட்டம்</h3> <p style="text-align: justify;">இந்த 24 மணி நேர குடிநீர் திட்டத்தில், தாம்பரம் மாநகராட்சியுடன் எதிர்காலத்தில் இணையவுள்ள 15 கிராம ஊராட்சிகளும் சேர்த்து சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மொத்தம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட செம்பாக்கம், மாடம்பாக்கம், சித்லபாக்கம், திருநீர்மலை, பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை ஆகிய 6 பகுதிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தில் தாம்பரம், பம்பல், பல்லாவரம் மற்றும் அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளும், மூன்றாம் கட்டத்தில் புதிதாக இணையவுள்ள 15 கிராம ஊராட்சிகளும் சேர்க்கப்பட்டு குடிநீர் விநியோகப் பணிகள் மேற்கொள்ளப்படும்.</p> <h3 style="text-align: justify;">கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்பம்</h3> <p style="text-align: justify;">புதிய திட்டத்தின்படி, குடிநீர் விநியோகக் குழாய் கட்டமைப்பு 1,140 கிலோமீட்டரிலிருந்து 1,502 கிலோமீட்டராக உயர்த்தப்பட உள்ளது. மண்டலங்களின் எண்ணிக்கை 58-லிருந்து 117 ஆகவும், குடிநீர் விநியோகப் பிரிவுகள் 156 ஆகவும் பிரிக்கப்பட உள்ளன. மேலும், புதிதாக அமைக்கப்படவுள்ள 59 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உட்பட மொத்தம் 117 தொட்டிகள் மூலம் 2,13,914 வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக ஸ்காடா (SCADA) அடிப்படையிலான நவீன தொழில்நுட்ப அமைப்பும் பயன்படுத்தப்பட உள்ளது.</p> <h3 style="text-align: justify;">நீர் ஆதாரங்கள் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்</h3> <p style="text-align: justify;">இத்திட்டத்திற்காக நெம்மேலி மற்றும் பேரூர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், ஓரத்தூர் நீர்த்தேக்கம், மணிமங்கலம் ஏரி, பாலாறு மற்றும் மதுராந்தகம் ஏரி ஆகிய பல்வேறு ஆதாரங்களில் இருந்து குடிநீர் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. நியமிக்கப்படும் ஆலோசகர்கள் இந்த நீர் ஆதாரங்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்குமா என்பதை ஆய்வு செய்வார்கள். தனியார் பங்களிப்புக்கான நிதி மாதிரி மற்றும் திட்ட முறைகள் விரைவில் இறுதி செய்யப்படும்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks