
<p><span dir="auto">ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், இன்று அமெரிக்க தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இரு தரப்பினருக்கும் இடையிலான ஒருதலைப்பட்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் கூறினார். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை வலியுறுத்திய அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை காலிபாஃப் சுட்டிக்காட்டினார்.</span></p>
<p><span dir="auto">புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, பாரசீக வளைகுடாவிலிருந்து ஓமான் கடலுக்கும், ஓமான் கடலிலிருந்து பாரசீக வளைகுடாவுக்கும் வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய, ஈரான் இஸ்லாமியக் குடியரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்காக 60 நாட்களுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டதாக காலிபாஃப் கூறினார். "ஒருதலைப்பட்ச ஒப்பந்தங்களின் சகாப்தம் முடிந்துவிட்டது. கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள், அதற்கான விலையை கொடுங்கள் என்று நாங்கள் கூறினோம். இப்போது யதார்த்தம் மெல்ல மெல்ல உறைக்கிறது." என்று அவர் தெரிவித்துள்ளார்.</span></p>
<h2><span dir="auto">ஈரானுக்கு எதிரான 3-வது கட்ட தாக்குதல்கள் தொடங்கும்: சென்ட்காம்</span></h2>
<p><span dir="auto">ஹார்முஸ் பகுதியில் வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலுக்கு ஈரானியப் படைகளே காரணம் என்று குற்றம் சாட்டி, இந்த வாரம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது கட்டத் தாக்குதல்களை தொடங்கவுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) அறிவித்துள்ள நிலையில், காலிபாஃபின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.</span></p>
<p><span dir="auto">தரை மற்றும் கடற்படை சார்ந்த போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களில் இருந்து பெறப்பட்ட துல்லியமான ஆயுதங்களை பயன்படுத்தி, அமெரிக்க ராணுவம் 140 ஈரானிய ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்கியது. இந்த இலக்குகளில், ஈரானிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தளங்கள், கடற்படைத் திறன்கள், வெடிமருந்து சேமிப்பு வசதிகள், தகவல் தொடர்பு வலையமைப்புகள் மற்றும் கடலோரக் கண்காணிப்பு வசதிகள் ஆகியவை அடங்கும். சென்டாம் (CENTCOM) அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் 300-க்கும் மேற்பட்ட இலக்குகள் குறிவைக்கப்பட்டு, ஈரானின் திறன்கள் முடக்கப்பட்டன. </span></p>
<h2><span dir="auto">இந்த தாக்குதல்களுக்கு ஈரான் மீது குற்றம் சாட்டியுள்ள கத்தார்</span></h2>
<p><span dir="auto">ஜோர்டானில் உள்ள ஒரு ராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஒரு ட்ரோன் கொட்டகை ஆகியவற்றை தாங்கள் அழித்ததாக, ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது. அல் ஜசீராவின் தகவலின்படி, கத்தார் இந்த தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது. வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதல்களுக்கு டெஹ்ரான் மீது குற்றம் சாட்டியுள்ளது.</span></p>
<p><span dir="auto">பதிலடி கொடுக்கும் உரிமையை கத்தார் கொண்டுள்ளது என்றும் அது கூறியது. ஈரான் இஸ்லாமியக் குடியரசு தனது நிலப்பரப்பிலும், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஓமான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் நிலப்பரப்புகளிலும் நடத்திய தாக்குதல்களை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தத் தாக்குதல்கள், இலக்கு வைக்கப்பட்ட நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் அப்பட்டமான மீறலாகக் கருதப்படுகின்றன.</span></p>
<h2><span dir="auto">ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து ஈரான் என்ன கூறியுள்ளது.? </span></h2>
<p><span dir="auto">மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது தலையீட்டை நிறுத்தும் வரை ஹார்முஸ் நீர்வழிப்பாதை மூடப்பட்டே இருக்கும் என்று, அதனைத் திறப்பது குறித்து ஈரான் தெளிவாகக் கூறியுள்ளது.</span></p>
<p> </p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/know-tulsi-tea-benefits-immunity-cold-cough-winter-skin-and-hair-care-267204" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article