
<p style="text-align: left;">தன்னை திருடன் எனக்கூறிய ஒன்றிய செயலாளர், தன்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை அதிமுக கூட்டத்திற்கு வரமாட்டேன் என வாணியம்பாடியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூட்டத்திலிருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
<p style="text-align: left;">திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், அதிமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.வீரமணி பங்கேற்றார். </p>
<p style="text-align: left;">ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளார் மணிகண்டன் கூட்டம் தொடங்கியவுடன் பேசியபோது, மாதனூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பொறியாளர் வெங்கடேசன் கடந்த தேர்தலில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், சமூக வலைதளங்களில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.சி வீரமணியை திருடன் என அவதூறு பரப்பியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதுவரை கூட்டம் நடக்க கூடாது என ஒரு தரப்பினர் கூறிய நிலையில், கூட்டம் முடிந்த பின்பு பேசிக் கொள்ளலாம் என ஒரு சிலர் பேசியதால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.</p>
<p style="text-align: left;"> </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/q3iTBjdAkBc?si=K2KzmN6rSP6Zsf6-" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p style="text-align: left;">பின்னர் பேசிய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர், கே.சி.வீரமணி, ‘எனக்கும் பொதுச்செயலாளருக்கும் ஆயிரம் பிரச்சனைகள் உள்ளது. அதை நாங்களே சரிசெய்துக்கொள்வோம். தேர்தலில் என்ன நடந்தது என தெரியாமல், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வெங்கடேசன், தேர்தலில் தோல்வியுற்ற விரக்தியில், தன்னை திருடன் என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தலில் சீட் கிடைக்கும் வரை, என்னிடம் இருந்த அவர் சீட் கிடைத்ததும், நான் தொடர்பு கொள்ளாத நிலைக்கு சென்றுவிட்டார். அவரும் அவரது மகனும் அவரது நண்பர்களும் சேர்ந்தே தேர்தலில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p style="text-align: left;">அவர் என்னை திருடன் எனக்கூறியது குறித்து, அதிமுக தலைமை, தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியதால், இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தலைமை கூறியும், செயல்வீரர்கள் கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளருக்கு தகவல் தெரிவிக்காமல், வெங்கடேசன் கூட்டத்தை புறக்கணித்துள்ளதால், அவர் வந்து மன்னிப்பு கேட்கும் வரை நானும் கூட்டத்திற்கு வருவதில்லையென கூறி, கே.சி.வீரமணி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் சென்றதால், கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>
<p style="text-align: left;">தன்னை திருடன் எனக்கூறிய ஒன்றிய செயலாளர், தன்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை அதிமுக கூட்டத்திற்கு வரமாட்டேன் என வாணியம்பாடியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூட்டத்திலிருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
<p style="text-align: left;">திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், அதிமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நடைபெற்றது,<br />இதில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.வீரமணி பங்கேற்றார். </p>
<p style="text-align: left;">ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளார் மணிகண்டன் கூட்டம் தொடங்கியவுடன் பேசியபோது, மாதனூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பொறியாளர் வெங்கடேசன் கடந்த தேர்தலில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், சமூக வலைதளங்களில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.சி வீரமணியை திருடன் என அவதூறு பரப்பியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதுவரை கூட்டம் நடக்க கூடாது என ஒரு தரப்பினர் கூறிய நிலையில், கூட்டம் முடிந்த பின்பு பேசிக் கொள்ளலாம் என ஒரு சிலர் பேசியதால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.</p>
<p style="text-align: left;">பின்னர் பேசிய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர், கே.சி.வீரமணி, ‘எனக்கும் பொதுச்செயலாளருக்கும் ஆயிரம் பிரச்சனைகள் உள்ளது. அதை நாங்களே சரிசெய்துக்கொள்வோம். தேர்தலில் என்ன நடந்தது என தெரியாமல், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வெங்கடேசன், தேர்தலில் தோல்வியுற்ற விரக்தியில், தன்னை திருடன் என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தலில் சீட் கிடைக்கும் வரை, என்னிடம் இருந்த அவர் சீட் கிடைத்ததும், நான் தொடர்பு கொள்ளாத நிலைக்கு சென்றுவிட்டார். அவரும் அவரது மகனும் அவரது நண்பர்களும் சேர்ந்தே தேர்தலில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p style="text-align: left;">அவர் என்னை திருடன் எனக்கூறியது குறித்து, அதிமுக தலைமை, தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியதால், இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தலைமை கூறியும், செயல்வீரர்கள் கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளருக்கு தகவல் தெரிவிக்காமல், வெங்கடேசன் கூட்டத்தை புறக்கணித்துள்ளதால், அவர் வந்து மன்னிப்பு கேட்கும் வரை நானும் கூட்டத்திற்கு வருவதில்லையென கூறி, கே.சி.வீரமணி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் சென்றதால், கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>
<p style="text-align: left;"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article