பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்

பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
News Image
<h2 dir="ltr"><strong>கஞ்சா பழக்கத்திற்கு அடிமை</strong></h2> <p>திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சற்குணத்தின் மகன் சஞ்சய் பிரவீன் ( வயது 21 ) இவர் 12 - ம் வகுப்பு வரை படித்து விட்டு கணினி பயிற்சி வகுப்புக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சில காலமாக மனநலப் பிரச்சினையாலும் அவதிப்பட்டு வந்ததாகவும் , கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p> <p>இதன் காரணமாக , அடிக்கடி கஞ்சா வாங்குவதற்காக பெற்றோரிடம் பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த 11-ஆம் தேதி பெற்றோர் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து , சஞ்சய் பிரவீன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததால் , பெற்றோரும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.</p> <h2><strong>கிணற்றில் மிதந்த நிலையில் உடல்</strong></h2> <p>இந்த நிலையில் , வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தனபால் என்பவரின் விவசாய நிலத்தில் அமைந்திருந்த கிணற்றில் இளைஞரின் உடல் மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.</p> <p>தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் இளைஞரின் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p> <h2><strong>பிரேத பரிசோதனை அறிக்கை</strong></h2> <p>போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் , சஞ்சய் பிரவீன் உயிரிழப்பதற்கு முன்பு தனது கையில் கல்லை கட்டிக் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் உயிரிழப்புக்கான சரியான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் காவல் துறை விசாரணைக்குப் பிறகே உறுதியாகத் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <p>இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இளைஞரின் உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் , அவரது உடல்நிலை , போதைப் பழக்கம் மற்றும் இதர காரணிகள் குறித்து பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், போதைப் பொருள் பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks