
<h2><strong>முதியவரை பராமரிக்கும் பணி</strong></h2>
<p dir="ltr">விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அம்பனேரி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மனைவி 33 வயதுடைய மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முனீஸ்வரி கணவரை பிரிந்து இராமநாதபுரம் மாவட்டம் தோழூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் தனியாக வசித்து வந்ததுடன், கட்டிட கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்.</p>
<p dir="ltr">இந்நிலையில், முனீஸ்வரியின் வீட்டின் அருகே வசித்து வந்த அனிதா என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு பகுதியில் முதியவரை பராமரிக்கும் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், நல்ல சம்பளம் வழங்கப்படும் என்றும் அனிதா கூறியதாக தெரிகிறது.</p>
<h2 dir="ltr"><strong>மிரட்டி பாலியல் வன்கொடுமை</strong></h2>
<p>இதையடுத்து, அனிதா கொடுத்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட முனீஸ்வரி, வேலைக்காக மேலூர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, தொலைபேசியில் பேசிய தாமரைப்பட்டியை பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கோபாலகிருஷ்ணன், முனீஸ்வரியை தனது இருசக்கர வாகனத்தில் வேலை நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி , மேலூர் அருகே உள்ள ஆள் நடமாட்டம் குறைவான பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்.</p>
<p>அங்கு ஏற்கனவே கோபாலகிருஷ்ணனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களான தாமரைப்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார் (33), வினித் (21), அரவிந்த் (26), மற்றும் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வீரபாண்டி (30) ஆகியோர் காத்திருந்திருக்கின்றனர். பின்னர் அவர்களிடம் முனீஸ்வரியை விட்டு விட்டு கோபாலகிருஷ்ணன் அங்கிருந்து சென்றதாக சொல்லப்படுகிறது.</p>
<p>இதை தொடர்ந்து அங்கிருந்த நபர்கள் முனீஸ்வரியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன், அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.</p>
<p>இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முனீஸ்வரி, அங்கிருந்து தப்பித்து அருகிலிருந்த மதுபானக் கடை பகுதியில் இருந்தவர்களிடம் நடந்தவற்றை கூறி உதவி கோரியுள்ளார். பின்னர், அங்கிருந்தவர்களின் உதவியுடன் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று முனீஸ்வரி புகார் அளித்தார்.</p>
<p>புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலையரசி மற்றும் ஆய்வாளர் ஜெயப்பிரதா தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, செல்வக்குமார், வீரபாண்டி, அரவிந்த் , வினித் , மற்றும் அவர்களுக்கு உதவியதாக கூறப்படும் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p>
Source: Read Full Article