8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!

8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
News Image
<p style="text-align: justify;">மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் ஒன்றுதான் 8வது சம்பள கமிஷன். இதன் கணக்கீட்டு முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கும், மத்திய அரசு ஊழியர்களுக்குமான பிரச்சனைகளை தீர்க்கும் அமைப்பாக விளங்கும் NC-JCM முக்கியமான பரிந்துரையை வைத்துள்ளது. அது தான் குடும்ப அமைப்பு.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/05/b4453fee48bf5337db6cccd137202a8c1783264074488193_original.JPG" /></p> <p style="text-align: justify;">8வது சம்பள கமிஷனில் குடும்பத்தின் அளவின் அடிப்படையில் சம்பளத்தை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என NC-JCM அமைப்பு முக்கியமான பரிந்துரையை கொடுத்துள்ளது. அதாவது இன்றைய விலைவாசி உயர்வின் அடிப்படையில் பார்க்கும் போது குடும்பத்தினரின் எண்ணிக்கை அடிப்படையில் செலவுகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஒரு மத்திய அரசு ஊழியரின் குடும்பத்தில் ஊழியர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் (கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள்) என்ற அடிப்படையில் மாத செலவுகள் கணக்கிடப்படுகிறது.</p> <p style="text-align: justify;">ஆனால் NC-JCM அமைப்பு இந்த குடும்ப அமைப்பு கணக்கீட்டு முறையை மாற்ற வேண்டும் என பரிந்துரைந்துள்ளது. இந்த 4 பேர் குடும்ப அமைப்பை 6 பேராக உயர்த்த வேண்டும் அதாவது பெற்றோர்கள் அல்லது மாமனார் - மாமியார் சேர்த்து மொத்தம் 6 பேர் கொண்ட குடும்ப அமைப்பாக கணக்கிட வேண்டும் என NC-JCM அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.</p> <p style="text-align: justify;">8வது சம்பள கணக்கீட்டு முறையில் வெயிட்டேஜ் பாயின்ட் கணக்கிடப்படும், அதில் அதில் அரசு ஊழியருக்கு 1 யூனிட், துணைவியருக்கு 0.8 யூனிட், 2 குழந்தைகளுக்கு தலா 0.8 மூலம் 1.6 யூனிட் என மொத்தம் 3.4 யூனிட் ஆக கணக்கிடப்படும். தற்போது பெற்றோர்கள் சேர்த்து 1.6 யூனிட் சேர்ந்து 5.0 ஆக கணக்கிடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/05/6e5692bbaf50ef4a2dad42ee791ac8b51783264013427193_original.JPG" /></p> <p style="text-align: justify;">இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கான தேவைப்படும் நிதி அதிகரிக்கும் அதன் வாயிலாக அடிப்படை சம்பளம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என கணக்கிட்டு NC-JCM அமைப்பு தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.</p> <p style="text-align: justify;">இதை தாண்டி உணவு, ஆடை, வீட்டு வாடகை, எரிபொருள், மின்சாரம், தண்ணீர், திறன் மேம்பாட்டில் ஏற்பட்ட விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டும் மாற்றங்கள் தேவை என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.</p> <p style="text-align: justify;">இந்த அடிப்படையில் தான் பிட்மென்ட் பேக்டர் 3.833 ஆக உயரும் என கணிக்கடப்பட்டு உள்ளது. ஆனால் சமீபத்தல் வெளியான பல்வேறு கணிப்பில் அதன் அளவு 2 முதல் 2.5 அளவுகளில் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks