4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
News Image
<h2 dir="ltr">" திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் "</h2> <p dir="ltr">விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கல்லறை தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு திருமணமாகி பொன்லட்சுமி என்ற மனைவி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெகநாதன் வெளிநாடுகளில் வேலை செய்து வந்ததாகவும் , ஸ்ரீவில்லிபுத்தூரில் அவரது குடும்பத்தினர் பலரிடம் சீட்டு பணம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது.</p> <p dir="ltr">இதற்கிடையே , ஜெகநாதனுக்கு நந்தினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நந்தினிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் , அவருக்கு 4 வயதில் பெண் குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நந்தினி , பின்னர் ஜெகநாதனுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.</p> <h2 dir="ltr"><strong>மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்</strong></h2> <p>நந்தினியின் 4 வயது மகளை ஜெகநாதன் அடித்து துன்புறுத்தியதுடன் , பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் , இந்தச் சம்பவத்திற்கு சிறுமியின் தாய் நந்தினியும் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்ற குற்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.</p> <p>இந்நிலையில் சிறுமியின் அழுகை மற்றும் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து விசாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என்றும் , அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் கூறி , ஜெகநாதனும் நந்தினியும் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.</p> <p>அங்கு சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதைப் பார்த்த மருத்துவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து, மருத்துவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிறுமியை மருத்துவமனையில் விட்டு விட்டு ஜெகநாதனும் நந்தினியும் அங்கிருந்து தலைமறைவாகியதாகத் தெரிகிறது.</p> <h2>" சிறுமிக்கு பாலியல் தொல்லை "&nbsp;</h2> <p>இதையடுத்து சிறுமியின் பாட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இருவரையும் கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.</p> <p>இந்த நிலையில் , ஜெகத்பூர் பகுதியில் பதுங்கி இருந்ததாகக் கூறப்படும் ஜெகநாதன் மற்றும் நந்தினி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <p>சிறுமிக்கு ஏற்பட்ட காயங்கள் பாலியல் தொல்லை குறித்த குற்றச்சாட்டு மற்றும் இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்ததாகக் கூறப்படும் குற்றச் சாட்டுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p> <p>குறிப்பாக, சிறுமிக்கு எதிராக இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றதா ? இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா ? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks