3-ஆம் வகுப்பு படிப்பு.. ஆயிரம் பேருக்கு வேலை! கேக் வெட்டி கொண்டாடிய பேரன் பேத்திகள் - சேலத்தில் நெகிழ்ச்சி!
சேலம்: இன்றைய அவசர உலகில் பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் தள்ளும் 'பெயின்புல்' காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில், சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ஒரு 100 வயது 'இளைஞர்' ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு மிகப்பெரிய 'இன்ஸ்பிரேஷன்' ஆக உருவெடுத்துள்ளார். தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 100 வயதான அண்ணாமலை ஐயாவின் பிறந்தநாள் விழா, இன்று அந்த ஊரையே திருவிழாக் கோலமாக மாற்றியது. வெறும் வயது முதிர்ந்த ஒருவராக இல்லாமல், இன்றும் சுறுசுறுப்புடன் தறி நெய்து உழைக்கும் இவரது 'எனர்ஜி', இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கே ஒரு 'வார்னிங்' கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
![]() |
| Photo Courtesy: Surya |
ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் முத்துசாமி - பாப்பம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த அண்ணாமலை, வறுமையின் காரணமாக 3-ஆம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி சென்றவர். ஆனால், தனது உழைப்பால் இன்று 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்குத் தொழில் வாய்ப்பை உருவாக்கித் தந்து, ஒரு மிகப்பெரிய 'எம்பையர்' உருவாக்கியுள்ளார். இவரது மனைவி பர்வதம்மாள் மற்றும் 3 மகள்கள், 5 மகன்கள் என ஒரு பிரம்மாண்ட கூட்டுக்குடும்பத்தின் தலைவராகத் திகழும் இவர், இன்றும் தனது கைத்தறியை விடாமல் உழைத்து வருவது ஒரு 'ரேர் பீஸ்' சாதனை. "வயது என்பது வெறும் நம்பர் தான்" என்பதைத் தனது ஒவ்வொரு அடியிலும் நிரூபித்து வரும் அண்ணாமலை, உள்ளூர் மக்களுக்குப் பல்வேறு சமூகக் கருத்துகளையும் போதித்து வருகிறார்.
இந்த நூற்றாண்டு நாயகனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பேரன், பேத்திகள் மற்றும் தாரமங்கலம் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரம்மாண்ட கேக் வெட்டிக் கொண்டாடினர். "தாத்தாவின் உழைப்புதான் எங்களது குடும்பத்தின் அஸ்திவாரம்" எனப் பேரன் பேத்திகள் நெகிழ்ச்சியுடன் 'விஷ்' செய்தனர். ஒரு தொழிலதிபராக இருந்தும், இன்றும் ஒரு சாமானியத் தொழிலாளியாகத் தறி நெய்வது தான் இவரது நீண்ட ஆயுளின் 'சீக்ரெட்' என அங்கிருந்தவர்கள் 'கெஸ்' செய்கின்றனர். சேலம் மாவட்டத்தின் நெசவுத் தொழிலுக்குப் பெருமை சேர்க்கும் இந்த 100 வயது 'யங்மேன்' அண்ணாமலையின் பிறந்தநாள், சமூக வலைதளங்களில் 'டிரெண்டிங்' ஆகி வருகிறது.
- ஆ.மாரியப்பன்
