IND vs SA T20: 8-வது தொடர் வெற்றி சாதனை படைக்குமா இந்தியா? லக்னோவில் இன்று அனல் பறக்கும் மோதல்! India vs South Africa 4th T20I Preview: Pitch Report

லக்னோவில் இன்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? - சூர்யகுமார், கில்லின் ஃபார்ம் கவலைகளுக்கிடையே தென்னாப்பிரிக்காவுடன் மோதல்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் தீர்மானிக்கத்தக்க நான்காவது ஆட்டம், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏக்கனா கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது. 

இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் லீடிங்கில் உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இந்தியா, சண்டிகரில் நடந்த இரண்டாவது போட்டியில் சற்று சறுக்கியது. இருப்பினும், தர்மசாலாவில் நடந்த மூன்றாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை துவம்சம் செய்து மீண்டும் முன்னிலை பெற்றது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், சர்வதேச டி20 தொடர்களில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா தொடர்ந்து வெல்லும் எட்டாவது தொடர் என்ற மெகா சாதனையைப் படைக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சுப் படை செம ஸ்ட்ராங்காக உள்ளது. அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர். குறிப்பாக, பும்ரா இல்லாத குறையைத் தீர்க்க வந்த ஹர்ஷித் ராணா கடந்த போட்டியில் காட்டிய பெர்ஃபார்மென்ஸ் தேர்வாளர்களைக் கவர்ந்துள்ளது. ஆனால், பேட்டிங்கில் டாப் ஆர்டர் சொதப்பல்கள் இந்தியாவிற்குப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடந்த 21 இன்னிங்ஸ்களிலும், தொடக்க வீரர் சுப்மன் கில் கடந்த 18 இன்னிங்ஸ்களிலும் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் ஃபார்ம் அவுட்டில் தவிக்கின்றனர். சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சீனியர் வீரர்கள் இருவரும் இன்று கம் பேக் கொடுத்தால் மட்டுமே இந்தியாவின் வெற்றி எளிதாகும்.

மறுபுறம், எய்டன் மார்க்கரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க இன்றைய போட்டியில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் (Must-win situation) உள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும், இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து ஸ்ட்ரகிள் ஆகி வருகிறது. லக்னோ ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இரு அணிகளின் ஸ்பின்னர்களும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள். தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், பதிலடி கொடுக்கும் வேகத்தில் தென்னாப்பிரிக்காவும் மோதுவதால் இன்றைய ஆட்டம் ஒரு ஹை-வோல்டேஜ் த்ரில்லராக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk