நீண்ட கால உடல்நலக்குறைவால் டாக்காவில் உயிர் பிரிந்தது; வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமருக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்!
வங்கதேச அரசியலின் 'இரும்புப் பெண்மணி' என்று அழைக்கப்படுபவரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான பேகம் கலிதா ஜியா (80) இன்று காலமானார். வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவரான இவர், கடந்த சில ஆண்டுகளாகவே இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். டாக்காவில் உள்ள எவர்்கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலிதா ஜியா, அந்நாட்டின் மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்தவர். ராணுவத் தளபதியாக இருந்து அதிபராக உயர்ந்த ஜியாவுர் ரஹ்மானின் மனைவியான இவர், தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியலில் நுழைந்தார். ஜனநாயகம் மலரவும், வங்கதேசத்தின் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பணிகள் உலகளவில் கவனிக்கப்படுபவை. கடந்த சில ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அரசியல் மாற்றத்திற்குப் பிறகு முழுமையாக விடுவிக்கப்பட்டார்.
அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு வங்கதேச மக்கள் மற்றும் பிஎன்பி (BNP) கட்சித் தொண்டர்கள் டாக்காவில் உள்ள மருத்துவமனை முன்பும், அவரது வீட்டின் முன்பும் கண்ணீர் மல்கக் குவிந்து வருகின்றனர். வங்கதேச இடைக்கால அரசின் தலைவர்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலிதா ஜியாவின் மறைவுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு மாபெரும் அரசியல் ஆளுமையின் மறைவு வங்கதேச வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
.jpg)