97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. ஜனநாயகப் படுகொலை இது! பொங்கியெழுந்த சசிகாந்த் செந்தில் எம்.பி.! 97 Lakh Voters Deleted: MP Sasikanth Senthil

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. ஜனநாயகப் படுகொலை இது! பொங்கியெழுந்த சசிகாந்த் செந்தில் எம்.பி.! 97 Lakh Voters Deleted: MP Sasikanth Senthil

இவ்வளவு காலம் போலி ஓட்டுகளை வைத்துதான் தேர்தல் நடத்தினீர்களா? தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி!

தமிழக தேர்தல் களத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரம், மிகப்பெரிய சதித்திட்டம் எனத் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் 'ஆவேச'மாகச் சாடியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த அதிரடி நீக்க நடவடிக்கையை 'ஜனநாயகப் படுகொலை' என கூறியதோடு, தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து 'நெருக்கடி' கொடுத்துள்ளார்.

திருவள்ளூர் தொகுதியில் மட்டும் லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சசிகாந்த் செந்தில், "இத்தனை லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என்றால், கடந்த தேர்தல்களை எப்படி நடத்தினீர்கள்?" என்று 'நறுக்கென'க் கேட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் முறையான திருத்தப் பணிகளுக்குப் பிறகே தேர்தல்கள் நடத்தப்படும் நிலையில், திடீரென ஒரே அடியில் 97 லட்சம் பேரை 'அவுட்' செய்தது எவ்விதத்தில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களைக் குறிவைத்து இந்த 'ஆபரேஷன்' நடந்திருக்க வாய்ப்புள்ளதாக அவர் தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

பிழைப்புக்காக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் தகவல் சென்றடையாத அப்பாவி மக்களை 'முகவரியில் இல்லை' என்று முத்திரை குத்தி நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று சாடிய அவர், இந்த SIR (சிறப்புத் தீவிர திருத்தப் பணி) முறையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்தார். வெறும் ஒரு மாத காலத்திற்குள் இவ்வளவு பெரிய குளறுபடிகளைச் சரிசெய்வது என்பது 'சாத்தியமே இல்லை' என்றும், இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான 'நெருக்கடி' என்றும் அவர் குற்றம் சாட்டினார். பழைய வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், 'இந்தியா' கூட்டணி மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கப் போர்க்களத்தில் இறங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks