சூடுபிடிக்கும் தேர்தல் களம்: 234 தொகுதிகளுக்கும் கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம்! Election Commission Appoints Additional AEROs for 234 Constituencies in Tamil Nadu

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விரைவான சரிபார்ப்புப் பணிகளுக்காகத் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கும் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை (Assistant Electoral Registration Officers - AERO) நியமித்துத் தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு தொகுதிக்கும் அதன் பரப்பளவு மற்றும் தேவையைப் பொறுத்து 5 முதல் 15 புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தின் மூலம், தற்போது ஒரு சட்டமன்றத் தொகுதிக்குக் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சமாக 20 அதிகாரிகள் வரை பணியாற்றும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதில் சுமார் 60 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் எனத் தேர்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவர்களின் விவரங்கள் மற்றும் புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள பல லட்சம் பேரின் மனுக்களை விரைவாகப் பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வரைவுப் பட்டியலில் இடம் பெற்றிருந்தும் முழுமையான ஆவணங்களைச் சமர்ப்பிக்காத லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, உரிய ஆவணங்களைப் பெறுவதே இந்த அதிகாரிகளின் முதன்மைப் பணியாக இருக்கும்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாகப் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வரும் நிலையில், கூடுதல் அதிகாரிகளின் நியமனம் இந்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மையையும் வேகத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய அதிகாரிகள் உடனடியாகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பணியைத் தொடங்குவார்கள் என்றும், வாக்காளர் பட்டியல் இறுதி வடிவம் பெறும் வரை இந்தப் பணிகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk