சேலம் – ஈரோடு இடையே மக்களின் கோரிக்கை நிறைவேறியது: புதிய மெமு ரயில் சேவை ஆரம்பம்! New Salem-Erode MEMU Train Service to Commence from November 24, 2025

தெற்கு ரயில்வேயின் வரவேற்கத்தக்க நடவடிக்கை: வியாழன் தவிர வாரத்தில் 6 நாட்களும் சேவை; தினசரிப் பயணிகள், மாணவர்கள் பேருபயம் பெறுவர்.

சேலம் மற்றும் ஈரோடு ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிகள் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள், வணிகச் சங்கங்கள், மற்றும் அரசியல் கட்சிகள் விடுத்து வந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வே சேலம் மண்டலம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சேலம் – ஈரோடு இடையே புதிய மெமு (MEMU – Mainline Electric Multiple Unit) பயணிகள் ரயில் சேவை வரும் நவம்பர் 24, 2025 முதல் தொடங்கவுள்ளது.

மக்களின் கோரிக்கைகளை ஏற்று, சேலம் ரயில்வே மண்டல நிர்வாகம் தயாரித்த திட்ட அறிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த ரயில் சேவை தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேவை விவரங்கள் மற்றும் பயண நேரம்: இந்த மெமு ரயில் சேவை வாரத்தில் வியாழக்கிழமை தவிர 6 நாட்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினசரி வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்குப் பேருபயோகமாக இருக்கும் இந்தச் சேவையின் விவரங்கள்:


ரயில் நிலையம்புறப்படும்/வந்து சேரும் நேரம்
ஈரோடு (புறப்பாடு)மாலை 7.30 மணி
காவிரிமாலை 7.38 மணி
சங்ககிரிமாலை 7.54 மணி
மகுடஞ்சாவடிஇரவு 8.09 மணி
சேலம் சந்திப்பு (சேருமிடம்)இரவு 8.45 மணி
மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய சேவை, சேலம் மற்றும் ஈரோடு பயணிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேறியுள்ளதால், இந்த புதிய சேவைக்குச் சேலம் மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு:இருப்பினும், இந்த ரயில் சேவை வியாழக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை இயங்காமல் இருந்தால், வார நாட்கள் முழுவதும் மக்கள் பயணிக்க மேலும் ஏதுவாக இருக்கும் என்றும் சில பயணிகள் தங்கள் கருத்தை முன்வைத்துள்ளனர்.



Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk