வேறு எங்கும் நடக்கவில்லையா? - தி.மு.க.வின் அதிரடிப் புள்ளிவிவரம்; விக்கிரவாண்டியில் 5 பேர் பலி, மதுரையில் 3 பேர் பலி எனத் த.வெ.க. மாநாடுகளின் துயரத்தை அடுக்கிக் குற்றச்சாட்டு!
சென்னை, செப்டம்பர் 30: கரூர் பெருந்துயரச் சம்பவம் குறித்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் வெளியிட்ட உருக்கமான வீடியோ மற்றும் பிற கட்சித் தலைவர்களின் விமர்சனங்கள் அரசியல் களத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ள நிலையில், திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ஐ.டி. விங்), த.வெ.க.வின் முந்தைய மாநாடுகள் மற்றும் பரப்புரைகளில் ஏற்பட்ட துயரச் சம்பவங்கள் குறித்து அதிரடிப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுச் சரமாரிக் கேள்வியை எழுப்பியுள்ளது.
திமுக ஐ.டி. விங் இன்று தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், என்ன ப்ரோ வேறு எங்கும் நடக்கவில்லையா? என்று அதிரடிக் கேள்வியுடன் விபத்து விவரங்களைப் பட்டியலிட்டுள்ளது. விக்கிரவாண்டி மாநாட்டின் போது 120க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து 5 பேர் பலியாகினர் என்றும், மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் 3 தொண்டர்கள் பலியாகி 380’க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் அழுத்தமாகத் திரைசேர்க்கை செய்துள்ளது.
மேலும், திருச்சியில் நடைபெற்ற பரப்புரையில் 50’க்கும் மேற்பட்டோர், நாமக்கல்லில் 16 பேருக்கு மேல் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும், நாகப்பட்டினம், சென்னையில் நடைபெற்ற கூட்டங்களிலும் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. இறுதியாக, எங்கும் சரியான நேரத்திற்கு வராததுதான் காரணம் ப்ரோ! என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது. இது, விஜய்யின் பரப்புரைப் பாணி மற்றும் காலதாமதமே விபத்துகளுக்குக் காரணம் என்ற விமர்சனத்தின் வீரியத்தைக் கூட்டியுள்ளது.
என்ன ப்ரோ வேறு எங்கும் நடக்கவில்லையா?
— DMK IT WING (@DMKITwing) September 30, 2025
விக்கிரவாண்டி மாநாட்டின் போது 120க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; 5 பேர் பலியாகினர்.
மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் 3 தொண்டர்கள் பலியாகினர்; 380’க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து பலர்… pic.twitter.com/bzmjKInnr7
in
தமிழகம்