பரபரப்பு வீடியோ வெளியீடு: வரதராஜர் கோவிலில் 'சடாரி' தகராறு – செயல் அலுவலர் தாக்கியதாக வடகலை பிரிவினர் புகார்! Kanchipuram Varadaraja Perumal Temple Dispute: EO Accused of Assaulting 65-Year-Old Man.

 பரபரப்பு வீடியோ வெளியீடு: வரதராஜர் கோவிலில் 'சடாரி' தகராறு – செயல் அலுவலர் தாக்கியதாக வடகலை பிரிவினர் புகார்! Kanchipuram Varadaraja Perumal Temple Dispute: EO Accused of Assaulting 65-Year-Old Man.

இரு பிரிவினர் மோதலில் கோவில் 'ஈ.ஓ' ராஜலட்சுமி மீது நேரடி குற்றச்சாட்டு; ரமேஷ் என்பவர் தாக்கப்பட்டதாக சிவ காஞ்சி காவல் நிலையத்தில் 'கேஸ் ஃபைல்.

காஞ்சிபுரம், செப்டம்பர் 3, 2025: 108 வைணவத் திவ்ய தேசங்களில் உலகப் புகழ்பெற்ற தலமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவது தொடர்பான மோதலில், கோவில் நிர்வாக அறங்காவலரும் உதவி ஆணையருமான (Executive Officer - EO) ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷ் என்பவரைத் தாக்கியதாகக் காவல் நிலையத்தில் புகார் (Complaint) அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (செப். 3) வரதராஜப் பெருமாள் கோவிலில் துப்புல் வேதாந்த தேசிகர் மங்களா சாசன உற்சவம் நடைபெற்றது. இந்த உற்சவத்தின் மரபுப்படி, வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார்கள் வகையறாவினர் மற்றும் வடகலை பிரிவினர் ஸ்தோத்திரப் பாடல்கள் பாடுவது வழக்கம். இந்தச் சூழலில், நேற்று மாலை வேதாந்த தேசிகர் முன்பு வடகலை பிரிவினர் பாடல் பாடியபோது, மணவாள மாமுனிகளை ஆச்சாரியாராகக் கொண்ட தென்கலை பிரிவினரும் ஸ்தோத்திரப் பாடல் பாட முற்பட்டனர்.

இதன் காரணமாக, வேதாந்த தேசிகரை ஆச்சாரியாராகக் கொண்ட வடகலை பிரிவினர், தென்கலை பிரிவினரை இவ்வாறு பாட அனுமதிக்கலாமா எனக் கேள்வி எழுப்பி, கோவில் நிர்வாக அறங்காவலரும் உதவி ஆணையருமான ராஜலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வடகலை பிரிவினரிடம் விசாரணை மேற்கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் பிரித்து அனுப்பினர்.

இந்தச் சலசலப்பு அடங்குவதற்குள், நேற்று மாலை நம்மாழ்வார் சன்னதி முன்பாகத் தொப்புள் வேதாந்த தேசிகர் எழுந்தருளி மரியாதை அளிக்கும் நிகழ்ச்சி தென்கலை பிரிவினர் மூலம் நடைபெற்றது. அப்போதும் தென்கலை மற்றும் வடகலை பிரிவினருக்கிடையே தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்தச் சண்டையின்போது, நடுவில் வந்த கோவில் செயல் அலுவலர் ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை தாக்கியதாக வடகலை பிரிவினர் சிவ காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தாக்கிய ஈ.ஓ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வடகலை பிரிவினர் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தது போன்ற வீடியோ ஆதாரமும் தற்போது வெளியாகி மாஸ் ஹிட் ஆகியுள்ளது. இது குறித்துப் போலீசார் விசாரணை (Inquiry) நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks