அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 28-ஆம் தேதி; சிஎஸ்கே உள்ளிட்ட ஐபிஎல் அணிகளில் விளையாடியவருக்கு அடித்த ஜாக்பாட்!
மிதுன் மன்ஹாஸ், இந்திய தேசிய அணிக்காக விளையாடாத போதிலும், உள்நாட்டுப் போட்டிகளில் ஒரு சிறந்த வீரராக அறியப்பட்டவர். ரஞ்சிக் கோப்பையில் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்காகப் பல ஆண்டுகள் விளையாடியுள்ளார். மேலும், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) உள்ளிட்ட மூன்று ஐபிஎல் அணிகளிலும் விளையாடி இருக்கிறார். இந்த அனுபவமே அவருக்கு இந்தப் பெரிய பதவி கிடைக்கக் காரணமாக இருக்கும் எனப் பேசப்படுகிறது.
பிசிசிஐ-யின் தலைமைப் பதவிக்கு ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இந்தத் தேர்வு, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்குப் புதிய திசையை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.