ஆம்னி பேருந்தில் 3.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சினிமா பாணியில் சிக்கிய கில்லாடிகள்! 3.5 kg of gold jewellery stolen from an omni bus: Two arrested

ஓட்டுநரை ஏமாற்றி தப்ப முயன்ற நகைக் கொள்ளையர்கள்; தனிப்படை போலீசாரின் துரித நடவடிக்கையால் கைது!

கோவையிலிருந்து புதுச்சேரிக்குச் சென்ற ஆம்னி பேருந்தில், சினிமா பாணியில் 3.5 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற இருவர், தனிப்படை போலீசாரின் துரித நடவடிக்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து விரிவான தகவல்:

கடந்த 15ஆம் தேதி, கோவையிலிருந்து புதுச்சேரிக்குச் சென்ற ஆம்னி பேருந்து, சங்ககிரி சுங்கச்சாவடி அருகே டீ குடிப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, பேருந்தில் பயணித்த ஒருவர், ஓட்டுநரை ஏமாற்றிவிட்டு, தங்க நகைகள் அடங்கிய பையுடன் தப்பியோடியுள்ளார். இந்தத் திடீர் கொள்ளைச் சம்பவம் குறித்து ஓட்டுநர் சங்ககிரி போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில், கோவை, சித்தாபுதூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (57) என்பவர் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பேருந்தில் பயணித்ததும், அவரே இந்த நகை கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனடியாகத் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, பாலசுப்பிரமணியனைப் பின்தொடர்ந்து சென்று கைது செய்தனர். அவரிடமிருந்து 3.5 கிலோ தங்க நகைகளை மீட்டனர்.

மேலும், இந்த கொள்ளைச் சம்பவத்தில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மெரிஜா (28) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரைப் புதுச்சேரியில் பதுங்கியிருந்தபோது கைது செய்தனர்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!