என் வயதுக்கு ஏற்றக் கதை வேண்டும் - நடிகை ஸ்ரீலீலா அதிரடிப் பேட்டி!

என் வயதுக்கு ஏற்றக் கதை வேண்டும் - நடிகை ஸ்ரீலீலா அதிரடிப் பேட்டி!


பெண்களை மையப்படுத்திய படங்கள் அதிகரிப்பது மகிழ்ச்சியளிப்பதாக முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையென நடிகை ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகை ஸ்ரீலீலா, தனது திரைப்படத் தேர்வு மற்றும் எதிர்கால திட்டங்கள்குறித்துப் பேசியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், அவர் தனது விருப்பங்கள்குறித்து வெளிப்படையாகப் பேசியது, ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது தனது 20-களில் இருப்பதால், இந்த வயதிற்குப் பொருத்தமான கதைகளிலும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த (RomCom) திரைப்படங்களிலும் நடிக்கவே விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். "காதல் கதைகள் மற்றும் நகைச்சுவைப் படங்கள் எனது வயதுக்கு ஏற்றதாக இருக்கும் என நான் நம்புகிறேன். இது போன்ற படங்களில் நடிப்பதன் மூலம் ரசிகர்களுடன் எளிதாக என்னால் இணைந்துகொள்ள முடியும்" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்திய சினிமாவில் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் அதிகரித்திருப்பது குறித்து ஸ்ரீலீலா மகிழ்ச்சி தெரிவித்தார். "சமீபகாலமாக, வலுவான பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட பல கதைகள் உருவாகி வருகின்றன. இது ஒரு ஆரோக்கியமான மாற்றம். நானும் அத்தகைய படங்களில் முதன்மைக் கதாபாத்திரமாக நடிக்க விரும்புகிறேன்" என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார். இது, கதைத் தேர்வில் அவரது புதிய அணுகுமுறையை உணர்த்துகிறது.

ஸ்ரீலீலாவின் இந்தக் கருத்துக்கள், அவரது அடுத்தடுத்த திரைப்படத் தேர்வுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!