வங்கக்கடலில் வலுப்பெற்றது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என எச்சரிக்கை! Cyclone Warning:Tamil Nadu Rains Expected Due to Bay of Bengal System

வங்கக்கடலில் வலுப்பெற்றது  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என எச்சரிக்கை! Cyclone Warning:Tamil Nadu Rains Expected Due to Bay of Bengal System

வங்கக்கடலில் வலுப்பெற்றது  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என எச்சரிக்கை!

தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே நாளைக் கரையை கடக்க வாய்ப்பு; தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்பள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.


மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாகக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (ஆகஸ்ட் 19) முற்பகல்வாக்கில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks